விந்தியா தோட்டத்து மாம்பழம் வந்திருச்சா.. ருசித்து ரசித்து சாப்பிட்ட ஜெ.. பிளாஷ்பேக்!
ஜெயலலிதா சமாதியில் நடிகை விந்தியா மாம்பழ படையல் வைத்தார்
Recommended Video
சென்னை: "அம்மா இருந்திருந்தால்.. எங்க தோட்டத்து மாம்பழங்களை ஆசை ஆசையா சாப்பிட்டு இருப்பாங்களே.." என்று கண்கலங்கி சொல்கிறார் நடிகை விந்தியா!
ஜெயலலிதாவின் வெறித்தனமான விசிறிதான் நடிகை விந்தியா. அதனால்தான் அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டதுடன், நட்சத்திர பேச்சாளராக களம் இறங்கினார்.
இவர் தாய்மொழி தெலுங்காக இருந்தாலும், கொஞ்சி பேசும் தமிழினை மக்கள் ரசிக்கவே செய்தனர். ஒவ்வொரு தேர்தலின்போதும், நட்சத்திர பேச்சாளர்களின் லிஸ்ட்டில் விந்தியா பெயரும் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். அந்த அளவுக்கு ஜெயலலிதாவின் அன்பை பெற்றவர் விந்தியா.
இவருக்கு ஆந்திரா மாநிலம் சந்திரகிரியில் மாம்பழ தோட்டம் சொந்தமாக உள்ளது. இங்கு விளையும் மாம்பழங்களை வருஷாவருஷம் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். 5 வருடமாக போயஸ் கார்டனுக்கு தோட்டத்து மாம்பழங்களை கொண்டு வந்து தந்தாராம் விந்தியா. அந்த மாம்பழங்களை சாப்பிட்ட ஜெயலலிதாவும், ரொம்ப ருசியாக இருக்கிறது என்ற அபாரமாக புகழ்ந்து தள்ளுவாராம்.
ஹேய்.. வாயு புயலே நீ வரியா இல்லையா? உன் சப்போர்ட்டரையாவது அனுப்பு.. ப்ளீஸ்.. கெஞ்சும் நெட்டிசன்கள்!
தற்போது ஜெ. இறந்துவிட்டதால், 2 வருடமாக இப்படித்தான் மாம்பழங்களை கொண்டு வந்து சமாதியில் படையல் வைத்துவிட்டு போகிறார் விந்தியா. இந்த வருடமும் தோட்டத்தில் பழங்கள் நல்ல விளைச்சலை தந்ததால், மாம்பழங்களை கூடையில் எடுத்து வந்து, நேற்று மாலை ஜெ. சமாதியில் வினோதமான முறையில் படையல் வைத்துவிட்டு போனார். "அம்மா மட்டும் உயிரோடு இருந்திருந்தால், மாம்பழங்களை ஆசை ஆசையா சாப்பிட்டிருப்பாங்களே." என்று கலங்கி சொல்கிறார் விந்தியா.