தமிழகத்தில் அந்தோ பரிதாபம்.. அரசு ஊழியர்கள் ஆதரவை இழந்தது அதிமுக கூட்டணி!
Recommended Video
சென்னை: தமிழகத்தில் தபால் வாக்குகளில் கூட அதிமுக முன்னிலை வகிக்காத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவால் அக்கட்சியினரும், கூட்டணிக் கட்சியினரும் அதிர்ச்சியில் உள்ளனர். நாடு முழுவதும் 17 -ஆவது மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணத் தொடங்கியது. இதில் தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிகளில் திமுக 9 இடங்களில் முன்னிலை வகித்தது. கடைசி வரை இதில் மாற்றமே இல்லை.
தபால் ஓட்டுக்களில் ஒரு இடத்தில் கூட அதிமுக கூட்டணி முன்னிலை வகிக்கவில்லை. இதனால் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடியுள்ள தொண்டர்கள் கடும் மனவருத்தமடைந்தனர்.
தூத்துக்குடி தொகுதி மக்களவை தேர்தல்.. திமுக முன்னிலை.. தமிழிசையை வீழ்த்த போகும் கனிமொழி இன்னும் சிலரோ பாஜகவுடன் கூட்டணி வைத்ததே இதற்கு காரணம் என கூறிக் கொண்டனர். அதேசமயம், அரசு ஊழியர்களின் மொத்த எதிர்ப்பையும் அதிமுக சம்பாதித்து வைத்துள்ளதையும் இது காட்டியுள்ளது.