தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எதிரொலி.. அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை வர கட்சித் தலைமை உத்தரவு?
Recommended Video
சென்னை: தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வெளியாகும் நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் சென்னைக்கு வருமாறு தலைமை கழகம் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டதாக தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து 18 பேரும் உயர்நீதிமன்றத்தை நாடினர்.
இதில் இரு நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கியதால் இந்த வழக்கு 3-ஆவது நீதிபதி சத்தியநாராயணாவிடம் சென்றது. அவர் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளார்.
தீர்ப்பு அரசுக்கு பாதகமாக வந்தால் பேரங்கள் நடைபெறும் என்பதால் 18 எம்எல்ஏக்களையும் குற்றாலத்தில் தங்க வைத்துள்ளார் தினகரன். இந்த நிலையில் இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் திடீர் ஆலோசனை கூட்டம் நடந்தது.
[செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்.. ஆளுநரும்தான்.. அடுத்தடுத்த நிகழ்வுகளால் சூடாகும் தமிழக அரசியல்!]
அப்போது தீர்ப்பு சாதகமாக வந்தால் ஓகே. ஆனால் பாதகமாக வந்துவிட்டால் என்ன செய்வது என்பது குறித்து ஆலோசனை நடந்தது. இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு அதிமுக தலைமை கழகம் திடீர் உத்தரவு பிறப்பித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.