அடுத்த தகுதி நீக்கம் இந்த 3 பேருமா??
Recommended Video
சென்னை: அதிமுக அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதால், தினகரனுக்கு ஆதரவாக உள்ள 3 எம்எல்ஏக்களும் தகுதிநீக்கம் செய்யப்படுவரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டதாக தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து 18 பேரும் உயர்நீதிமன்றத்தை நாடினர்.
இதில் இரு நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கியதால் இந்த வழக்கு 3-ஆவது நீதிபதி சத்தியநாராயணாவிடம் சென்றது. அவர் இன்று தீர்ப்பு அளித்தார். அதில் 18 பேரையும் நீக்கியது செல்லும் என்று அதிரடி தீர்ப்பளித்து விட்டார்.
இந்நிலையில் தினகரனுக்கு ஆதரவாக அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், எஸ்.ஆர்.பிரபு ஆகிய 3 பேர் உள்ளனர். அவர்களும் தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் குற்றாலத்தில் தங்கியுள்ளனர்.
தற்போது அதிமுக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதால் இந்த 3 பேரின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. தினகரன் தரப்புடன் உறவாடி வருவதால் மேற்கண்ட 3 பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தகுதி நீக்க வழக்கில் என்ன நடந்தால் என்ன.. தினகரன் வைத்து இருக்கும் 4 திட்டங்கள் இதுதான்!