திமுக சதி செய்வதாகக் குற்றச்சாட்டு.... அதிமுக வேட்பாளர் தர்ணா போராட்டம்!
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சென்னை: திமுக மீது குற்றஞ்சாட்டி சென்னையில் அதிமுக வேட்பாளர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
வடசென்னை நாடாளுமன்ற தொகுதி மற்றும் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி ஆகிய வாக்கு எண்ணிக்கை ராணிமேரி கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜேஷ் ராணி மேரி கல்லூரிக்கு வந்தார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் வந்தனர்.
அப்போது திமுக முன்னிலையில் இருப்பதற்கு சதி வேலை நடத்தியதாகவும் பெட்டிகளை மாற்றி வைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினர். மேலும் திமுக மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
Comments
English summary
The Chennai Perambur assembly constituency by election candidate Rajesh protested in front of Queen Mary's college, where the votes have been counted.
Story first published: Thursday, May 23, 2019, 13:16 [IST]