எம்.ஜி.ஆர். 32-வது நினைவுத்தினம்... நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை
சென்னை: அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 32-வது நினைவு தினத்தை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
மேலும், அதைத்தொடர்ந்து நினைவிடம் அருகிலேயே அதிமுகவை உயிரினும் மேலாக பேணி காப்போம் என ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். உள்ளிட்ட உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
எம்.ஜி.ஆர். காலத்து அதிமுக சீனியர்கள் மட்டும் கருப்புச்சட்டை அணிந்தவாறு நினைவஞ்சலி செலுத்தினர். மற்றவர்கள் வழக்கம் போல் ஒயிட் அண்ட் ஒயிட் உடைகளிலேயே அஞ்சலி செலுத்த வந்திருந்தனர்.
ஜார்க்கண்ட் வரலாற்றில் முதல்முறையாக.. சட்டசபைக்கு 10 பெண்கள் தேர்வு.. முதல்முறையாக 6 பேர் வெற்றி
எம்.ஜி.ஆர்.நினைவுதினம்
அதிமுக நிறுவனரும், முதலமைச்சராக இருந்து மறைந்தவருமான எம்.ஜி.ஆரின் 32-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.
சூளுரை
எம்.ஜி.ஆர். நினைவிட நுழைவுவாயில் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழி வாசிக்க அதை அங்கு கூடியிருந்த கட்சியினர் அதனை பின் தொடர்ந்து கூறினர். அதிமுகவை உயிரினும் மேலாக மதித்து காப்போம் என சூளுரைத்தனர்.
அடிச்சுவடு
அதிமுக ஆயிரங்காலத்து பயிர் என்றும் அதனை யாராலும் அழிக்க முடியாது எனவும் சூளுரை வாசித்தனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரின் அடிச்சுவட்டை பின்பற்றி அதிமுக செயல்படுவதாக ஓ.பி.எஸ். கூறினார். அவரைத் தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆரின் பெருமைகளை பட்டியலிட்டார்.
சீனியர் நிர்வாகி
எம்.ஜி.ஆருக்கு நினைவஞ்சலி செலுத்த வந்த அதிமுக நிர்வாகிகளில் எம்.ஜி.ஆர் காலத்து ஆட்கள் மட்டும் கருப்புச்சட்டை அணிந்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர். மேலும், அமைச்சர்கள் பலர் உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் எம்.ஜி.ஆர். நினைவுதின மரியாதை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.