திமுக, அதிமுக, அமமுக.. ஒரே நாளில் வேட்பாளர் அறிவிப்பு.. ஏன் தெரியுமா?
அதிமுக, திமுக, அமமுக.. ஒரே நாளில் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது
Recommended Video
சென்னை: திமுக, அதிமுக, அமமுக.. என எல்லாருமே இன்று ஒரே நாளில் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளனர்!
மத நம்பிக்கை உள்ளவர்கள் பொதுவாக ராகு கால நேரத்தில் நல்ல காரியங்களைத் தொடங்க மாட்ட மாட்டார்கள். பல்வேறு அரசியல் கட்சிகளும், கட்சிகளின் தலைவர்களும் இதற்கு விதிவிலக்கு இல்லைதான். அதனால் அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்வது வழக்கம்.
குறிப்பாக ஜெயலலிதா, எந்தச் செயலையும் நல்ல நாள், நேரம் பார்த்து செய்வார். தொகுதி ஒதுக்கீடு, கூட்டணி அறிவிப்பு, வேட்பு மனு தாக்கல் என எதுவாக இருந்தாலும் அது குறிக்கப்பட்ட நல்ல நேரத்தில்தான் நடக்கும்.
திமுக கூட்டணி Vs அதிமுக கூட்டணி.. எங்கெங்கு நேரடி போட்டி.. விவரங்கள் இதோ..
கருணாநிதி
அவர் மட்டுமில்லை, கட்சியில் உள்ள அதிமுக வேட்பாளர்களாகட்டும், அல்லது இரட்டை இலைச் சின்னத்தில் நிற்கும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் ஆகட்டும்.. எல்லோருக்கும் இதே உத்தரவுதான் பிறப்பிப்பார். இப்படி ஒரு செயல்பாடு, மறைந்த கருணாநிதியில் இருந்து அன்புமணி வரை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இன்று அறிவிப்பு
அதேதான் இன்றைக்கும் நடந்திருக்கிறது. மார்ச் 17ஆம் தேதியான இன்று ஏகாதசி மற்றும் சுபமுகூர்த்த நாள் என்பதால் அதிமுக, திமுக, அமமுக ஆகிய 3 கட்சிகளும் தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவிக்க ஏற்கனவே திட்டமிட்டுவிட்டது.
வேட்பாளர் பட்டியல்
திமுக தலைவர் முக. ஸ்டாலின் இன்று திமுக போட்டியிடும் 20 தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களுடன் இணைந்து தொகுதி பட்டியலை வெளியிட்டுள்ளது.
3 முக்கிய கட்சிகள்
ஒரே ஒரு தொகுதியை மட்டும் கூட்டணி கட்சிக்கு கொடுத்துவிட்டு மீதி 39 தொகுதிகளிலும் தானே களமிறங்கும் தில் தினகரனும் குத்துமதிப்பாக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டார். எனவே ஒரே நாளில் திமுக, அதிமுக, அமமுக என 3 முக்கிய கட்சிகளும் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பானது, அடிக்கும் வெயிலிலும் தமிழக மக்களை சேர்ந்து சூடேற்றி வருகிறது. ஆனால் "நலிந்தோர்க்கு இல்லை நாளும் கிழமையும்" என்றுதான் நமக்கு சொல்ல தோன்றுகிறது!