அமைச்சர் பதவி வேண்டாம்... அருண் ஜேட்லி அதிரடி!
டெல்லி: தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என அருண் ஜேட்லி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நரேந்திர மோடி நாளை பிரதமராக குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்கவுள்ளார். அவரை தொடர்ந்து அவரது அமைச்சரவையும் பதவியேற்கவுள்ளது.
அமைச்சரவையில் யாருக்கு இடம் கொடுக்கலாம், யார் யாருக்கு என்னென்ன இலாகா வழங்கலாம் என பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷாவுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என அருண் ஜேட்லி மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உடல்நிலையை கருத்தில் கொண்டு ஓய்வெடுக்க விரும்புவதாகவும் ஜேட்லி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கட்சிக்கும் ஆட்சிக்கும் வெளியில் இருந்தபடியே அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்றும் அருண் ஜேட்லி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
Newest First Oldest First
Comments
English summary
ADMK MLAs takes oath today in Assembly. Chief Minister Edappadi Palanisami and Deputy CM O Paneerselvam are participating.