எதுக்கு வீடியோ எடுக்கிற? எனக்கு பொண்ணு தரப்போறியா?.. போலீஸாரிடம் அநாகரீகமாக எகிறிய வக்கீல்கள்
போலீசாரை 2 வக்கீல்கள் மிரட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
Recommended Video
சென்னை: "எனக்கு பொண்ணா தரப்போற? எதுக்கு வீடியோ எடுக்கிறே... முதல்ல போனை வை.. செல்போனை உடைச்சிடுவேன்" என்று போலீசுக்கே மிரட்டல் விடுத்துள்ளனர் வக்கீல்கள் 2 பேர்!
சென்னை எழும்பூர் கோர்ட்டிற்கு கைதிகளை போலீசார் இன்று அழைத்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது கைதிகளிடம் வழக்கறிஞர்கள் 2 பேர் வழிமறித்து பேசினர். அப்போது போலீசார் நிறைய பேர் உடனிருந்தனர்.
பொதுவாக கோர்ட்டுக்கு கைதிகளை போலீசார் கூட்டி வந்தால் யாரிடமும் பேச அனுமதிக்க கூடாது என்பது விதி.
பேச அனுமதி இல்லை
ஏனெனில் கைதிகளிடம் யாரையேனும் பேச அனுமதித்தால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படலாம், அல்லது வழக்கு விசாரணைக்கு இடையூறுகள் ஏற்பட்டு விடும் என்பதால், குற்றவாளிகளை யாருடனும் பேச அனுமதிப்பதில்லை. ஆனால் இந்தவிதி தெரிந்தும் வக்கீல்கள் கைதிகளிடம் பேசினர்.
தொட்டு பேசாதீங்க
இந்த காட்சியை போலீஸ்காரர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தார். பின்னர் கைதிகளை தொட்டு தொட்டு பேசியதை பார்த்த மற்ற பாதுகாப்பு போலீசார் வக்கீல்களிடம், "பேசுங்கள்... வேண்டாம்னு சொல்லலை. ஆனால் தொட்டு பேசாதீங்க" என்றனர். இதை கேட்டதும், அந்த வக்கீல்களுக்கு கோபம் வந்துவிட்டது.
எதுக்கு வீடியோ எடுக்கிற?
உடனே போலீசை பார்த்து, "நான் யார் தெரியுமா.? எப்படி எங்களை பார்த்து மேல கை வைக்க வேணாம்னு சொல்லுவீங்க? என்று அநாகரீகமாக பேச ஆரம்பித்துவிட்டார். பிறகு வீடியோ எடுத்து கொண்டிருப்பதை கவனித்துவிட்ட வக்கீல், "எதுக்கு வீடியோ எடுக்கிற? எனக்கு பொண்ணு தரப்போறியா?
பொண்ணு தரப்போறியா?
முதல்ல போனை வை.. டா.. செல்போனை உடைச்சிடுவேன்... பொண்ணாடா தரப்போறே? வீடியோ எடுத்து யாருக்கு அனுப்புவே... உன்னால் எங்களை ஒன்னும் செய்ய முடியாது. உங்க டிஜிபியை இப்பவே நான் இங்க வர வைக்கிறேன் பாக்கிறியா? என்று விரலை நீட்டி மிரட்டுகிறார் அந்த கருப்பு அங்கி அணிந்த வக்கீல்.
இது நியாயமா?
சட்ட விதிகளை கடைப்பிடித்த போலீசாரை, சட்டம் படித்த வக்கீல்களே அதை மீறியதுடன், போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுவது எந்தவிதத்தில் நியாயம் என்றே தெரியவில்லை.