குருப்பெயர்ச்சி வரை காத்திருங்கள்.. அறிவுரை சொன்ன ஜோதிடர்.. ரஜினிகாந்த் போடும் திட்டம்!
நடிகர் ரஜினிகாந்த் அடுத்த வருடம் குருப்பெயர்ச்சிக்கு பின் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அடுத்த வருடம் குருப்பெயர்ச்சிக்கு பின் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து இரண்டு வருடம் ஓடிவிட்டது. ஆனால் இன்னும் அவர் கட்சி தொடங்கியபாடில்லை. அவர் எப்போது அரசியல் கட்சியை தொடங்க போகிறார் என்பது தற்போது மிகப்பெரிய கேள்வியாக எழுந்து உள்ளது.
பெரும்பாலும் அடுத்த வருடம் மத்தியில் அவர் கட்சி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அரசியல் ஆலோசர்கள் சிலரை அவர் அணுகி வருகிறார்.
என் இப்போது
இந்த நிலையில் நடிகர் ரஜினி இது தொடர்பாக தன்னுடைய ஜோதிடரை சந்தித்து ஆலோசனை செய்துள்ளார். அதில், எப்போது அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும். அரசியலில் காலடி எடுத்து வைக்க எது சரியான நேரம் என்று ரஜினி கேட்டுள்ளார். எல்லோரையும் முறையாக அணுகிவிட்டு அவர் கட்சி தொடங்க இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.
இல்லை
ஆனால் இந்த வருடம் கட்சி தொடங்க ஏதுவான நேரம் இல்லை. அடுத்த வருடம் வரை காத்திருங்கள் என்று ரஜினிக்கு ஜோதிடர் கூறிவிட்டார் என்று கூறப்படுகிறது. அதன்படி அடுத்த வருடம் குருப்பெயர்ச்சிக்கு பின் கட்சி தொடங்கினால் சரியாக இருக்கும். அதற்கு பிறகு முக்கிய முடிவுகளை எடுங்கள்.
என்ன முடிவு
2020 மார்ச் இறுதிக்கு பின் உங்கள் நேரம் நன்றாக இருக்கும். அதற்கு பிறகு வேண்டுமானால் கட்சி தொடங்கலாம் என்று அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். இதனால் அதுவரை நடிகர் ரஜினி எந்த முக்கிய முடிவையும் எடுக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள்.
என்ன அறிவிப்பு
இதனால்தான் அடுத்த வருடம் ஏப்ரலில் ரஜினி கூட்டம் நடத்த வாய்ப்புள்ளது என்றும் தகவல் வெளியானது. அவர் ஏப்ரல் மாதம் மதுரையில் கூட்டம் நடத்தி கட்சி அறிவிப்பை வெளியிடுவார். அதே நாளில் கட்சியின் சின்னம் மற்றும் பெயரை வெளியிடுவார் என்று கூறுகிறார்கள்.