சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு மாதத்துக்கு பின் மது கடைகள் திறப்பு- சூடம் கொளுத்தி, தேங்காய் உடைத்து கொண்டாடிய குடிமகன்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஒரு மாதத்துக்குப் பின்னர் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபான கடைகள் இன்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன. மதுபான கடைகள் 1 மாதத்துக்குப் பின்னர் திறக்கப்பட்டதால் குடிமகன்கள் பெரும் மகிழ்ச்சியுடன் கடைகளில் குவிந்தனர்.

Recommended Video

    திறக்கப்பட்டது TASMAC! குடிமகன்கள் மகிழ்ச்சி | OneIndia Tamil

    "பெண்கள் பாதுகாப்பு".. அடுத்தடுத்த ஆக்சன்.. பரபரப்பு கேஸ்களில் சாட்டையை சுழற்றிய தமிழ்நாடு அரசு!

    தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை காரணமாக தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் அமலில் உள்ளது. இந்நிலையில் லாக்டவுன் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு இருந்தன.

    லாக்டவுன் காலம்

    லாக்டவுன் காலம்

    லாக்டவுன் காலத்தில் கள்ள சந்தைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யபட்டன. அதேபோல் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் மதுபானங்கள் கடத்தி கொண்டுவரப்பட்டு பதுக்கி விற்கப்பட்டன.

    மதுபான கடைகள் திறப்பு

    மதுபான கடைகள் திறப்பு

    இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை மீண்டும் இன்று முதல் 27 மாவட்டங்களில் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு 27 மாவட்டங்களிலும் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டன.

    டாஸ்மாக் கடைகளுக்கு பூஜை

    டாஸ்மாக் கடைகளுக்கு பூஜை

    காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்ட உடனேயே தேங்காய் உடைத்து பூஜை செய்தனர் குடிமகன்கள்.

    டோக்கன்கள் கூட்டம்

    டோக்கன்கள் கூட்டம்

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மதுபானங்கள் பெற டோக்கன்களும் கூட வழங்கப்பட்டன. சில இடங்களில் அதிகாலை முதலே மதுபானங்களை வாங்க குடிமகன்கள் டோக்கன் பெறுவதற்கு நீண்ட வரிசையில் சமூக இடைவெளி ஏதுமின்றி கூட்டம்கூட்டமாக ஒருவருக்கு ஒருவர் முந்திக் கொண்டு நின்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கூடுதல் விலைக்கு விற்பனை

    கூடுதல் விலைக்கு விற்பனை

    பல இடங்களில் வழக்கத்தை விட டாஸ்மாக் மதுபானங்கள் விலை மிகவும் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டதாகவும் குடிமகன்கள் புகார்கள் தெரிவித்தனர். அதேபோல் அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறி பைகளில், சாக்குகளில் என அதிக எண்ணிக்கையில் மதுபாட்டில்கள் குடிமகன்களுக்கும் வழங்கப்பட்டன.

    முத்தமிட்டு பூஜை

    முத்தமிட்டு பூஜை

    கன்னியாகுமரி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது. மது வகைகளை வாங்கிய மது பிரியர்கள் கோவிலில் சுவாமி கும்பிடுவது போல சூடம் பத்தி காண்பித்து, இரு கைகளால் கும்பிட்டு மது பாட்டில்களை முத்தமிட்டு வினோதமான முறையில் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.

    English summary
    After One Month, TASMAC outlets opened in 27 Dists of Tamilnadu from today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X