மோடி அமைச்சரவையில் இடமில்லை... இனி என்ன செய்யும் அதிமுக.. அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?
மத்திய அமைச்சரவையில் இடம் இல்லாததையடுத்து என்ன செய்ய போகிறது அதிமுக
Recommended Video
சென்னை: ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுகவின் ஓபி.ரவீந்திரநாத் குமார் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதனால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாஜகவுடனான இனி அவர்களது அடுத்தகட்ட நகர்வு எப்படி இருக்க போகிறது என்பதில்தான் பெரிய எதிர்பார்ப்பே அடங்கி உள்ளது.
நேற்று மத்திய அமைச்சரவையில் அதிமுக சார்பில் ஒருவருக்கு பதவி கிடைக்கும் என கூறப்பட்டது. ஒரு பக்கம் ஓபிஎஸ் தன் மகனுக்காகவும், கட்சி சீனியரான வைத்திலிங்கத்துக்காக முதல்வரும் பதவியை வாங்கி தர கடுமையாக முயற்சி செய்தார்கள்.
இதனிடையே, டெல்லிக்கு வரச்சொல்லி மேலிடத்தில் இருந்து போன் வரவும் தமிழக அரசியலே பரபரப்பானது. ஏனென்றால், என்னதான் ஓபிஎஸ் பாஜகவுக்கு நெருக்கடி தந்தாலும், ஒட்டுமொத்த அதிமுக தொகுதியில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் என்பதால், எப்படியும் பதவி கிடைக்கும் என சொல்லப்பட்டது.
ஓஹோ.. இதுதான் விஷயமா.. அதான் மேனகாவுக்கு அமைச்சர் பதவி இல்லையா?
பெரிய ஷாக்
அதுமட்டுமில்லை, இதற்காக இவரது ஆதரவாளர்கள் பதவியேற்றபின் வரவேற்க ரவீந்திரநாத்குமாரின் போஸ்டர்களை 2 நாளைக்கு முன்னாடியே ஒட்டி மகிழவும் தொடங்கிவிட்டனர். ஆனால், அதிமுகவில் யாருக்குமே பதவி தரப்படாதது அக்கட்சிக்கு பெரிய ஷாக்கை தந்துள்ளது!
அங்கீகாரம்
இதை அதிமுக எப்படி எடுத்து கொள்ள போகிறது என தெரியவில்லை. மக்களின் எதிர்ப்பை மீறி விரும்பி கூட்டணி வைத்தது. இன்று பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால், குறைந்தபட்ச வாக்குகளையாவது அக்கட்சி பெற்றிருக்கும் அல்லது மக்கள் கோபம், அதிருப்திக்கு ஆளாகாமல் ஆவது இருந்திருக்கும். இப்போது தேர்தல் வாக்குகளில் தோற்று, கட்சி செல்வாக்கையும் இழந்து, மத்திய அமைச்சர் பதவியும் தரப்படாமல், ஒரு அங்கீகாரத்தையே இழந்து நிற்கிறது.
கறார் தலைவர்
இன்னும் 2 வருட ஆட்சியில் இவைகளை எல்லாம் களைந்து கட்சியை காப்பாற்ற எடப்பாடி கடுமையாக போராட வேண்டியிருக்கும். இதற்காக அவர் என்னென்ன நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என்பதுதான் தெரியவில்லை. முதலில் அதிமுகவுக்கு ஸ்தாபன ரீதியாக ஒரு தலைவர் தேவைப்படுகிறார். ஜெயலலிதாவுக்கு பிறகு யாரிடமும் "கட் அண்ட் ரைட்" தலைவர் கட்சிக்கு இல்லாததே பெரிய மைனஸ்.
எடப்பாடி அரசு
அடுத்ததாக கட்சியை வலுப்படுத்த வேண்டியுள்ளது. தொண்டர்களின் அதிருப்திகளை போக்க வேண்டியுள்ளது. இதற்காக அமமுகவை இணைக்க எடப்பாடி தயாரானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஒருவேளை இதற்கு சம்மதம் இல்லையானால், அமமுக தரப்பில் உள்ள பலம் வாய்ந்த வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் ஆகிய 2 பேரையும் எடப்பாடி தங்கள் பக்கம் இழுக்கவும் முயற்சி மேற் கொள்வார் என்றே தெரிகிறது. ஏனென்றால், இவர்கள் இருவரும் உடன் இருந்தால் அதிமுக பலமாகும் என்றுகூட முதல்வர் யோசிப்பார்.
பிரச்சாரம்
மகனுக்கு சீட் வாங்குவது முதல், தேனிக்கு முதல்வரை பிரச்சாரத்துக்கு அழைத்தது, வாரணாசி சென்றது, கடைசிவரை மகனுக்கு பதவி வாங்கி தர ஓபிஎஸ் எடுத்த முயற்சிகளையும் அதிமுக தலைமை உன்னிப்பாகத்தான் கவனித்து வந்தது. இதனையடுத்து பல விவகாரங்களில் எடப்பாடி தரப்பு உஷாராகவே காய் நகர்த்தவே கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.