2000 நோட்டு.. ஆர்கே நகர் பாணி டோக்கன் சிஸ்டம்.. செந்தில்பாலாஜி மீது செந்தில் நாதன் பகீர்
கரூர்: ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டை கொடுத்து திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மக்களை ஏமாற்றுவதாக அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழகத்தில் இன்று அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் உள்ளிட்ட நான்கு தொகுதிகளின் இடைத்தேர்தல் நடந்து வருகிறது.
அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில் நாதன், வாக்குப்பதிவு நடந்து வரும் பள்ளப்பட்டி வாக்குச்சாவடியை இன்று பார்வையிட்டார்.
அரசியல் பச்சோந்தியின் பரிதவிப்பு.. கடுமையாக விமர்சிக்கும் தமிழிசை.. யாரைன்னு பாருங்க!
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "வாக்குப்பதிவு எல்லா இடங்களிலும் சிறப்பாக நடந்த வருகிறது. திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, வாக்காளர்களை வாக்களிக்கவிடாமல் தடுக்கிறார். மேலும் வாக்களிக்க வரும் மக்களிடம் வாக்களித்து விட்டு வாருங்கள், உங்களுக்கு ரூ.2 ஆயிரம் தருகிறேன் என்று சொல்கிறார். தொடர்ந்து மக்களை ஏமாற்றுவதில் குறிக்கோளாக இருக்கிறார் எதிர்க்கட்சி வேட்பாளர் செந்தில் பாலாஜி.
வாக்களிக்க வரும் மக்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டை செந்தில் பாலாஜி தரப்பினர் கொடுத்திருக்கிறார்கள். போலீசார் இதனை கார்குலி ஊராட்சியில் இப்போது பிடித்திருக்கிறார்கள். ஆர்கே நகர் போல் டோக்கன் கொடுத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
மக்கள் எல்லாம் பதற்றமாக இருக்கிறார்கள். நிம்மதியாக ஓட்டு போடவிடாமல் செய்துவிட்டார் செந்தில் பாலாஜி, அவர் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து உள்ளோம்" என்றார்.