சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேர்தலில் தோற்றதால் அதிருப்தி.. அவரைத் தூக்கு.. இவரைத் தூக்கு.. மா.செக்களை மாற்ற அதிமுக திட்டம்?

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தல் முடிவு எதிரொலி... அதிமுக, பாஜகவில் சலசலப்பு

    சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளன. இதனால் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் மாவட்ட செயலாளர்கள் மீது அதிருப்தியில் உள்ளனர். இதையடுத்து தேர்தலில் சரியாக பணியாற்றாத மாவட்ட செயலாளர்களை மாற்ற அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.அதன் கூட்டணி கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பல இடங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளனர். அதிமுகவினரும் 3லட்சம் முதல் 4 லட்சம் வாக்குகள்வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர்.

    22 தொகுதி இடைத்தேர்தலில் 9 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. இதில் 21 தொகுதிகளில் கடந்த 2016ம் ஆண்டு அதிமுக வெற்றி பெற்று இருந்தது. தோல்வி அடைந்த பல தொகுதிகள் அதிமுகவின் கோட்டையாக இருந்தவை ஆகும்.

    அதிமுகவினரை கேவலமாக சித்தரிக்கும் துக்ளக் கார்ட்டூன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!அதிமுகவினரை கேவலமாக சித்தரிக்கும் துக்ளக் கார்ட்டூன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!

    பாஜகவினர் பகீர் புகார்

    பாஜகவினர் பகீர் புகார்

    இந்த தேர்தல் தோல்வியால் அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் சோகத்தில் உள்ளனர். இதற்கிடையே கூட்டணி கட்சியாக பாஜக அதிமுக தலைமையிடம் புகார் அளித்துள்ளனர் தங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் தங்களை வெற்றி பெறவைக்க முயற்சி செய்யவில்லை என தெரிவித்துள்ளனர்.

    பொன் ராதா படுதோல்வி

    பொன் ராதா படுதோல்வி

    குறிப்பாக தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை வெற்றி பெற்று இருந்தால் மத்திய அமைச்சர் ஆகியிருந்திருப்பார். ஆனால் திமுகவின் கனிமொழியிடம் சுமார் 3லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார். இதேபோல் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரிடம் தோல்வி அடைந்தார். இந்த இரண்டு தோல்விக்கும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று பாஜகவினர் பகிரங்கமாகவே குற்றம்சாட்டி உள்ளனர்.

    மாற்றப்படும் மாவட்ட செயலாளர்

    மாற்றப்படும் மாவட்ட செயலாளர்

    இதையடுத்து விரைவில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக தொண்டர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஏ அசோகனை அதிமுக தலைமை மாற்றக்கூடும் என்கிறார்கள். அவருக்கு பதிலாக கன்னியாகுமரி மாவட்ட மருத்துவ அணி செயலாளராக உள்ள சி.என்.ராஜதுரைக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என வலியுறுததி மாவட்ட நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடியை சந்தித்து மனு அளித்துள்ளார்களாம்.

    செல்லூர் ராஜு

    செல்லூர் ராஜு

    இது ஒரு புறம் எனில் தன் மகன் தோற்றதால், மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு எதிராக ராஜன் செல்லப்பா போர்க்கொடி உயர்த்திவருகிறார். இதுபோல் தேர்தலில் தோல்வி அடைந்த பலர் சிறப்பாக செயல்படவில்லை என அதிமுகமாவட்ட செயலாளர்கள் மீது முதல்வர் பழனிச்சாமியிடம் புகார் அளித்துள்ளனர். இதன் காரணமாக அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருகிறது.

    நடவடிக்கை உறுதியாம்

    நடவடிக்கை உறுதியாம்

    தேர்தலில் யார் யாரெல்லாம் வாக்காளர்களுக்கு பணத்தை வழங்காமல் அமுக்கினார்கள், யார் யாரெல்லாம் சிறப்பாக வேலை செய்யவில்லை என்பது தொடர்பான நிர்வாகிகள் பட்டியலை அதிமுக தலைமை உளவுத்துறை மூலம் எடுத்து வருகிறதாம். தற்போது தேர்தலில் தோல்வி அடைந்தவர்களை சமாதானம் செய்ய அதிமுகவில் உள்ள 50 மாவட்ட செயலாளர்கள் பதவிகளில் சிலவற்றை கொடுக்க திட்டமிட்டுள்ளார்களாம். விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரஉள்ளதால் அதிமுகவில் நிலவும் அதிருப்தியை சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் முதல்வர் பழனிச்சாமி அதிரடி முடிவு எடுப்பார் என்கிறார்கள் அதிமுகவினர்.

    English summary
    aiadmk district Secretaries may changed over lok sabha polls big Defeat, because bjp and aiadmk Executives Report against district secretary
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X