உள்ளாட்சி தேர்தல்.. .பரபரப்பான சூழலில் நாளை மாலை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
சென்னை: ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் பரபரப்பாக அரசியல் களம் மாறியுள்ள நிலையில நாளை மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.
கிராமபுறங்களுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி வரும் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30ம் தேதி தமிழகம் முழுவதும் ஊரகப்பகுதியில் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில் வேட்பாளர்களை களம் இறக்குவது, அதிக இடங்களில் வெற்று பெறுவது உள்ளிட்ட இலக்குகளுக்காக விரிவான முன்னேற்பாடுகளை அதிமுக செய்து வருகிறது.
ஒவ்வொரு கிராம புறங்களில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளரை தேர்வு செய்து நிறுத்த வேண்டும் மாவட்ட நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தி இருந்தது.
சுமித்ராவின் உடம்பெல்லாம் ஏறிய விஷம்.. ஷூவுக்குள் பதுங்கியிருந்த பயங்கரம்.. பரிதாப முடிவு!
இந்த சூழலில் நாளை காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கட்டாயம் அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி கட்சிகளூக்கு ஒதுக்கப்டும் கிராப்பகுதிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.