நான் எளிமையானவன்... எங்கள் மடியில் கனமில்லை - அதிமுக பொதுக்குழுவில் இபிஎஸ் பேச்சு
அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று கூடுகிறது: வழிகாட்டுதல் குழுவுக்கு அதிகாரம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேறுகின்றன.
சென்னை: நான் சாதாரண குக்கிராமத்தில் இருந்து வந்தவன். என் உயிர் மூச்சு உள்ளவரை அதிமுக என் குருதியில் கலந்திருக்கும் என்று முதல்வரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, எங்கள் மடியில் கனமில்லை வழியில் எங்களுக்கு பயமில்லை என்றும் தெரிவித்துள்ளார். சட்டசபைத் தேர்தலில் 100 சதவிகிதம் வெற்றி பெற ஒவ்வொரு தொண்டர்களும் பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். திட்டம் போட்டு தேர்தல் வியூகம் வகுத்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம்.. 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்..!
Newest First Oldest First
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மக்களின் மகத்தான ஆதரவை சிந்தாமல் சிதறாமல் வாக்குகளாக மாற்ற வேண்டும்.
அதிமுக ஒரு எஃகுக் கோட்டை அதை யாரும் அசைக்க முடியாது.
எங்கோ ஒரு மூளையில் இருந்த நம்மை இங்கு வைத்து அமர வைத்தது ஜெயலலிதா.
அதிமுகவிற்கும் ஜெயலலிதாவிற்கும் நன்றிக்கடன் ஆற்ற வேண்டும்
நாம் மாளிகையில் இருக்கவில்லை மக்களோடு மக்களாக இருக்கிறோம் - ஓபிஎஸ்.
தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த கட்சி அதிமுக மட்டுமே.
நம்மை யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது.
சாதாரண தொண்டர்களால் வலுவாக உருவாகியுள்ள இயக்கம் அதிமுக.
அதிமுக தொண்டர்கள் நல்லவர்கள் வல்லவர்கள் என்ற நல்ல பெயர் உள்ளது
2021ஆம் ஆண்டு தமிழகத்தில் புதிய புரட்சி உருவாகும் - ஓபிஎஸ்.
அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு.
கொரோனாவை விட மோசமான வைரஸ் ஆக திமுக திகழ்கிறது.
திமுகவை ஒரேடியாக அரசியலை விட்டு விரட்ட வேண்டும்.
மக்களின் மகத்தான ஆதரவோடு 3வது முறையாக ஆட்சி பீடத்தை ஏற்கப்போகிறது.
அதிமுகவை எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாது.
அதிமுகவில் சாதாரண தொண்டர் கூட முதல்வர் ஆக முடியு
READ MORE
Comments
aiadmk ops eps tamil nadu assembly election 2021 admk meeting அதிமுக ஒபிஎஸ் இபிஎஸ் தமிழக சட்டசபைத் தேர்தல் 2021 அதிமுக செயற்குழு கூட்டம் politics
English summary
AIADMK Executive Committee and General body meeting is being held today at Vanakaram, Chennai under the chairmanship of E. Madhusudhanan. A large number of policemen have been deployed in the hall area where the general body and executive committee meeting to be held.