சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒன்றும் செய்யாத அதிமுக அரசு.. சென்னை உங்கள் கோட்டையா?.. தமிழச்சி தங்கபாண்டியன் சரவெடி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் எதையும் செய்யாத அதிமுக அரசு, அனைத்தையும் செய்ததாக கூறி வருவதாக, தென் சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் குற்றம்சாட்டினார்.

அசோக் நகரில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கிய தமிழச்சி தங்கபாண்டியன், திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

AIADMK government has not done anything In Tamil Nadu Says Tamizhachi Thangapandian

அப்போது சென்னை மக்களின் கோரிக்கைகள், திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். எதையும் செய்யாத அதிமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் தமிழச்சி தங்கபாண்டியன் கேட்டுக்கொண்டார்.

மேலும், விளையாட்டுத் திடல், பாதாளச் சாக்கடை உள்ளிட்டவற்றை குப்பம் பகுதியைச் சேர்ந்த மக்கள் கேட்டுள்ளார்கள். அவர்களின் அனைத்து கோரிக்கைகளையும், திமுக தலைவர் ஸ்டாலினிடம் சொல்லியிருப்பதாகவும் ஆட்சிக்கு வந்தவுடன் பிரச்சனைகள் தீர்க்கப்படும் எனவும் தெரிவித்தார்.

வைட்டமின் வைட்டமின் "ப" வை நம்பி அதிமுக.. கரை சேருமா திமுக.. எடுபடாத அமமுக.. பரமக்குடியில் வெல்வது யார்?

மக்கள் பிரச்சனை இருந்து கொண்டே தான் உள்ளது. எந்த பிரச்சனையையும் தீர்க்காமல், இதுதான் எங்கள் கோட்டை என்று சொன்னால் கூரைமீது ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி, எங்கோ போனது போல் அர்த்தமாகிவிடும் என விமர்சனம் செய்தார்.

English summary
South Chennai constituency DMK candidate Tamizhachi Thangapandian Said that AIADMK government has not done anything In Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X