சட்டசபை தேர்தல் வியூகம்.. சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னை: சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெறுவது உறுதப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலுக்கான அதிமுக கூட்டணி அப்படியே தொடரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இருந்தபோதும் அதிமுகவிடம் தேமுதிக 41 தொகுதிகளை கேட்டு வருவதால் அந்த கட்சி கூட்டணியில் இடம்பெறுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
புதிய விவசாய சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த வேட்டவலம் மணிகண்டன்... விவசாயிகள் கடும் அதிருப்தி..!
சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை திமுக தொடங்கிவிட்டது. தேர்தல் அறிக்கை தயாரிப்பதிலும் திமுக முமுரமாக உள்ளது. இந்த நிலையில் சட்டசபை தேர்தல் வியூகம் தொடர்பாக விவாதிக்க சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாஜகவுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில் நடைபெறும் முதல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இது.
ஏற்கனவே பூத் கமிட்டி தொடர்பான விவரங்களை இன்றைய ஆலோசனை கூட்டத்தில் தரவேண்டும் என அதிமுக தலைமை உத்தரவிட்டிருந்தது. இன்றைய கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள் என மொத்தம் 97 பேர் பங்கேற்றிருந்தனர்.