அதிமுக அவை தலைவர் மதுசூதனனுக்கு திடீர் நெஞ்சுவலி.. அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
Recommended Video
சென்னை: அதிமுக அவை தலைவர் மதுசூதனன் இருதய கோளாறு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவின் அவைத்தலைவராக இருப்பவர் மதுசூதனன். இவருக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சென்னை கிரீம்ஸ் சலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுசூதனனுக்கு இன்று ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது நலமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
எனினும் மருத்துவர்கள் மதுசூதனன் உடல்நிலையை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
மதுசூதனன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் கேட்டு அதிமுகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் அவரை நலம் விசாரித்து வருகிறார்கள்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆர்கே நகரில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட மதுசூதுனன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் தோல்வி அடைந்தார்