தமிழக சட்டசபையில் அதிமுகவின் பலம் மேலும் குறைந்தது.. காலியிடங்கள் 22 ஆக உயர்ந்தது!
சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மரணம் காரணமாக தற்போது தமிழக சட்டசபையில் காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்து இருக்கிறது.
Recommended Video
சென்னை: சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மரணம் காரணமாக தற்போது தமிழக சட்டசபையில் காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்து இருக்கிறது.
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று காலை செய்தி தாள் வாசித்துக் கொண்டு இருக்கும் போது மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் சட்டசபையில் அதிமுகவின் பலம் மேலும் குறைந்து உள்ளது. தமிழக சட்டசபையின் உண்மையான பலம் 234. இதில் 21 இடங்கள் காலியாக இருந்தது. தற்போது கனகராஜ் மரணம் காரணமாக காலி இடம் 22 ஆக உயர்ந்து இருக்கிறது.
சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மரணம்.. காலையில் நாளிதழ் படிக்கும் போது மாரடைப்பு
அதனால் தமிழக சட்டசபையில் இப்போது 212 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அதிமுக 113 உறுப்பினர்களை கொண்டு இருக்கிறது. திமுகவின் பலம் 97 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே காலியாக இருந்த 21 இடங்களில் 18 இடங்களுக்கு மட்டுமே சட்டசபை இடைதேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் மூன்று தொகுதிகளில் வழக்கு நடந்து வந்தது. அதில் ஒட்டப்பிடாரம் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. இன்றோ, நாளையோ திருப்பரங்குன்றம் வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்படும்.
இதனால் தற்போது ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய தொகுதிகளுக்கு லோக்சபா தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.