அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக மாநிலங்களவை எம்பியாக இருப்பவர் நவநீதிகிருஷ்ணன். இவர் கடந்த 2014ம் ஆண்டு முதல் எம்பியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று இரவு நவநீதகிருஷ்ணனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை உடனடியாக சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எதுக்குண்ணே அழறீங்க.. சரி சரி இலைக்கே போடறோம்.. முகத்தை தொடைங்க முதல்ல.. ஆண்டிப்பட்டி கலகல!
இதனிடையே அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2018ம் ஆண்டு மாநிலங்களவையில் காவரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்ட போது, நவநீதிகிருஷ்ணன் பேசுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வோம் என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.