Breaking News: சுபமாக முடிந்த அதிமுக - பாஜக கூட்டணி.. டெல்லி கிளம்பினார் கோயல்
சென்னை: லோக்சபா தேர்தலுக்காக, அதிமுக மற்றும் பாமக நடுவே கூட்டணி உறுதியாகியுள்ளது. பாமகவிற்கு அதிமுக கூட்டணியில் 7 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில், அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் இந்த உடன்படிக்கை உருவாக்கத்தில் இன்று பங்கேற்றனர். பாமக சார்பில், அதன் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில், பாஜகவின் தமிழக பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று சென்னை வந்துள்ளார்.
திருச்சியில் தமிழிசை சவுந்திர ராஜனும், நெல்லையில் நயினார் நாகேந்திரனும் போட்டியிட வாய்ப்பு
கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் களமிறங்க வாய்ப்பு
திருப்பூரில் வானதி சீனிவாசன், கோவையில் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டி என தகவல்
அதிமுக பாஜக பாமக கூட்டணி படு தோல்வி அடையும்- கருணாஸ் ஆவேசம்
நான், தமிமுன் அன்சாரி, தனியரசு இந்தக் கூட்டணியை ஏற்க மாட்டோம் - கருணாஸ்
மோடி தலைமையில் மத்தியில் மீண்டும் ஆட்சி வரக் கூடாது - கருணாஸ்
தமிழகத்தை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கிறார் மோடி - கருணாஸ்
லோக்சபா தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் - ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக, பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் எட்டப்பட்டது - ஓ.பன்னீர்செல்வம்
பாஜகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது - ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக - பாமக கூட்டணி குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்
ஏற்கனவே அதிமுக-பாமக கூட்டணி தோல்வியை சந்தித்தது - திருமாவளவன்
ஜெயலலிதாவின் முடிவுகளுக்கு எதிராகத்தான் அதிமுக தற்போது செயல்படுகிறது - திருமாவளவன்
பாமகவுடன் கூட்டணி வைத்து ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிராக செயல்பட்டுள்ளனர் - திருமாவளவன்