அதிமுக செய்தி தொடர்பாளர் மார்க்கண்டேயன் உள்பட 3 பேர் நீக்கம்: ஒபிஎஸ் -ஈபிஎஸ் அதிரடி
Recommended Video
சென்னை: அதிமுக செய்தி தொடர்பாளர் மார்க்கண்டேயன் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அறிவித்துள்ளனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று கூட்டாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
அதில் அதிமுக செய்தி தொடர்பாளர் மார்க்கண்டேயன் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்கள் இதேபோல் மார்க்கண்டேயனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் தெய்வேந்திரன் மற்றும் சங்கரபாண்டியன் ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்கள்.
வெல்ல முடியாதவர்களின் முட்டாள்தனமான தப்புக்கணக்கு: ரெய்டு குறித்து துரைமுருகன்
கட்சியின் கண்ணியத்துக்கும், மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதுடன், அதிமுக வேட்பாளர் சின்னப்பனுக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிடுவதுடன், கட்சியை விமர்சித்து பேசியதால் இந்த மூன்று பேரையும் நீக்கி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
விளாத்திகுளம் தொகுதியில் சீட் கேட்டு போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் விரக்தி அடைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏவாகன மார்க்கண்டேயன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் தெய்வேந்திரன் மற்றும் சங்கரபாண்டியன் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். மூவரும் பிரசாரத்தில் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.