அதிமுகவில் நாளை மறுநாள் விருப்ப மனு செலுத்தியவர்களிடம் நேர்காணல்
சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் அதிமுகவில் நாளை மறுநாள் நேர்காணல் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டசபை பொதுத்தேர்தல்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்தவர்களிடம் வரும் 4-ந் தேதி நேர்காணல் நடைபெற உள்ளது.
காலை 9 மணி முதல் 2 கட்டங்களாக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடைபெறும். விருப்ப மனு பெற்றதற்காக அசல் ரசீதுடன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஓபிஎஸ், ஈபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
தமிழக சட்டசபைத் தேர்தல் 2021 tamil nadu assembly election 2021 admk அதிமுக விருப்ப மனு நேர்காணல் politics
English summary
AIADMK will conduct interviews with party Assembly poll ticket aspirants.