செப். 28ம் தேதி அதிமுக செயற்குழுக் கூட்டம்.. ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு.. முக்கிய முடிவு?
சென்னை: செப்டம்பர் 28 ஆம் தேதி அதிமுக செயற்குழுக் கூட்டம் நடக்கும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக அலுவலகத்தில் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி கூட்டம் நடைபெற்றது. நீண்ட நேரம் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சட்டமன்ற தேர்தல், கட்சி பிரச்சனை, நிர்வாகிகள் நியமனம், தேர்தல் திட்டங்கள், கட்சி பொறுப்புகள் என்று பல்வேறு விஷயங்கள் குறித்து இன்று கட்சி கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. அதோடு அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வருகிறது.
அம்மாவின் வாரிசு ஓபிஎஸ்.. வருங்கால முதல்வர் ஈபிஎஸ்.. அதிமுக ஆபீஸ் வெளியே மாறி மாறி கோஷம்.. பரபரப்பு
இந்த நிலையில்தான் செப்டம்பர் 28 ஆம் தேதி அதிமுக செயற்குழுக் கூட்டம் நடக்கும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். கட்சியின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து இதில் ஆலோசனை செய்ய உள்ளனர்.
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடக்கிறது. அழைப்பிதழ் உள்ள செயற்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.