ரத்த மாதிரிகளுக்கு 5 வகை சோதனை அவசியம்.. எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் சுற்றறிக்கை
சென்னை: சாத்தூரில் கர்ப்பிணிக்கு எச்ஐவி பாதித்த ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அனைத்து அரசு ரத்த வங்கிகளுக்கு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
கர்ப்பிணி பெண்ணுக்கு தற்போது மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் நிலையில், இந்த சம்பவத்தை போல தமிழத்தில் பிற மருத்துவமனைகளிலும் நடைபெற வாய்ப்புள்ளதா என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.
இதனிடையே, அனைத்து அரசு ரத்த வங்கிகளுக்கும், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், தானம் பெறப்படும் ரத்த மாதிரிகள் 5 வகை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். குறிப்பிட்ட வெப்ப நிலையில் ரத்தம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
Aids control board issue release to all blood banks to ensure, HIV virus doesn't spread.
Story first published: Thursday, December 27, 2018, 13:48 [IST]