தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் சாதித்து வருபவர் அஜீத் - ஓபிஎஸ் புகழாரம்
சென்னை: சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள் என்று நடிகர் அஜீத் குமாரை பாராட்டி வாழ்த்தியுள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து சுமார் 900க்கும் மேற்பட்டோர் இந்தப் போட்டியில் பங்கேற்றார்கள்.

இந்த போட்டியில் சென்னை ரைஃபிள் கிளப் அணி பல்வேறு பதக்கங்களைக் குவித்தது. சென்னை ரைஃபிள் கிளப்பின் உறுப்பினரான நடிகர் அஜித் அவர்கள் 6 பதக்கங்களை வென்றார். அவருக்கு கிளப்பின் இதர உறுப்பினர்கள் தங்களுடையப் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,'தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்புச்சகோதரர் திரு.அஜீத்குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்!' எனத் தெரிவித்துள்ளார்.

பைக் ரேஸ், கார் ரேஸ்,ட்ரோன் தயாரிப்பில் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர் அஜித், துப்பாக்கி சுடுதல் போட்டியின் மீதும் அவருக்கு ஆர்வம் அதிகம் உண்டும். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் சென்னை துப்பாக்கி சுடுதல் கிளப்புக்குச் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அவரது பயிற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. வெற்றி பதக்கங்களை கழுத்தில் அணிந்து அஜீத் மேடையேறியது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்முள்ளது.