சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நாளை ஆக்சிஜன் தீர்ந்துவிடும்". ஹைகோர்ட்டில் தமிழக அரசு வாதம்.. உடனே வழங்க மத்திய அரசுக்கு உத்தரவு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜனை உடனே மத்திய அரசு வழங்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுக்க கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் பெட்கள் மற்றும் ஆக்சிஜன் தேவை அதிகரித்து உள்ளது. டெல்லி, உத்தர பிரதேசம், கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பலியாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

ஸ்டாலின் அமைச்சரவையில் 20 புதிய முகங்களுக்கு வாய்ப்பு?.. இன்று வெளியாகிறது லிஸ்ட்! ஸ்டாலின் அமைச்சரவையில் 20 புதிய முகங்களுக்கு வாய்ப்பு?.. இன்று வெளியாகிறது லிஸ்ட்!

இந்த நிலையில் பல்வேறு மாநில உயர் நீதிமன்றத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டுக்கு எதிராக வழக்குகள் நடந்து வருகிறது.

வழக்கு

வழக்கு

தமிழகத்திலும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டிற்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. தமிழகத்தில் இருந்து ஆக்சிஜன் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது, ரெமிடிஸ்வர் மருந்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது என்று பல செய்திகள் தொடர்ந்து வெளியான நிலையில், சென்னை ஹைகோர்ட் தாமாக முன்வந்து இந்த வழக்கை கையில் எடுத்தது.

விளக்கம்

விளக்கம்

இந்த வழக்கில் மே 3ம் தேதிக்கு பின் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய 475 தன் மத்திய அரசால் முறையாக ஒதுக்கப்படவில்லை என்று தமிழக அரசு கூறியது. தமிழகத்தில் உற்பத்தியாகும் 400 டன்னில் 60 டன் வெளிமாநிலங்களுக்கு செல்வதாகவும், தமிழகத்திற்கு ஆக்சிஜன் முறையாக வரவில்லை என்றும் தமிழக அரசு சென்னை ஹைகோர்ட்டில் வாதம் வைத்தது.

ஆக்சிஜன் உற்பத்தி

ஆக்சிஜன் உற்பத்தி

அதோடு, தமிழகத்தில் 2 நாட்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் இருப்பு உள்ளது. போக போக நிலைமை மோசமாகிடும், சனிக்கிழமைக்கு பிறகு நிலைமை மோசமாகிவிடும். விரைவில் இதனால் தமிழகத்திற்கு ஆக்சிஜனை வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசு ஹைகோர்ட்டில் வாதம் வைத்தது.

 உத்தரவு

உத்தரவு

இதையடுத்து சென்னை ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவில், போதுமான ஆக்சிஜன் வழங்குவதை நாளைக்குள் உறுதிசெய்ய வேண்டும். நாளை வரைதான் மத்திய அரசுக்கு கெடு. வடமாநிலங்களில் ஆக்சிஜன் வழங்குவது போல தமிழகத்திற்கும் வழங்க வேண்டும். டிஆர்டிஓ மூலம் அங்கு ஆக்சிஜன் வழங்குவது போல தமிழகத்திற்கும் வழங்க வேண்டும். . உடனே ஆக்சிஜன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

English summary
Allocate deserved amount of Oxygen to Tamilnadu immediately says Madras HC to central.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X