டமால், டுமீல்.. கட்டுக்கட்டாக பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிய அமமுகவினர்.. ஆண்டிப்பட்டி களேபரம்
Recommended Video
சென்னை: போலீசாரை பார்த்ததும் சிலர் பணத்தோடு தப்பியோடிய சம்பவம் ஆண்டிப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி நகரில் உள்ள, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின், ஒன்றிய அலுவலகத்தில் நேற்று இரவு வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
ஆண்டிபட்டியில் கைப்பற்றப்பட்ட ரூ.1.48 கோடி அதிமுகவுக்கு சொந்தமானது... அமமுக வேட்பாளர் பல்டி
ஆனால் வருமானவரித்துறையினரை, உள்ளே அனுமதிக்காமல், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் சிலர் தடுத்தனர். அப்போது போலீசார் 4 ரவுண்டுகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வருமான வரி சோதனையில் 1.48 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
ஒரு தபால் ஓட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சிலர் பணத்தோடு தப்பி ஓடியதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக 2 கோடியை கொண்டுவந்துள்ளனர் போலீசார் வானத்தை நோக்கி சுட்ட போது சிலர் பணத்துடன் தப்பி ஓடிவிட்டனர். இவ்வாறு வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.