சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிங்கம்பட்டி ஜமீன்ந்தார் மறைவு வருத்தம் அளிக்கிறது.. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இரங்கல்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் கடைசி முடிசூடிய ஜமீன்ந்தார் முருகதாஸ் தீர்த்தபதி மறைவிற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

Recommended Video

    Singampatti Zamin History In Tamil

    தமிழகத்தின் கடைசி முடிசூடிய மன்னரான நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் ஜமீன்ந்தார் முருகதாஸ் தீர்த்தபதி கடந்த 24ம் தேதி காலம் ஆனார். இவரின் மரணம் சிங்கம்பட்டியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 89 வயதான இவர் உடல்நலக் குறைவால், காலமானார்.

    AMMK condolences for Singampatti Zamin death

    இவரின் உடலுக்கு மக்கள் திரளாக திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இவரின் இறப்பிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்;.

    தற்போது இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இரங்கல் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், அண்மையில் காலமான சிங்கம்பட்டி ஜமீன்தார் திரு.டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி ராஜாவின் மறைவுக்கு கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறார்.

    AMMK condolences for Singampatti Zamin death

    அவரின் சார்பில், கழக தேர்தல் பிரிவு செயலாளரும், கயத்தாறு ஒன்றியக்குழு பெருந்தலைவருமான திரு. SVSP.மாணிக்கராஜா, திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.V.P.குமரேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர். சிங்கம்பட்டி அரண்மனையில் ஜமீன்தாரின் குடும்பத்தாரைச் சந்தித்த நிர்வாகிகள் அவர்களுக்கு கழக பொதுச்செயலாளரின் சார்பில் ஆறுதல் கூறினர், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    English summary
    AMMK party condolences for Singampatti Zamin death.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X