சுஜித் மரணம் மனதை உலுக்குகிறது... டிடிவி தினகரன் இரங்கல்
Recommended Video
சென்னை: ஆழ்துளை கிணற்றில் இருந்து 2 வயது குழந்தை சுஜித் சடலமாக மீட்கப்பட்டது தனது மனதை உலுக்குவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்வீட்டரில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
சுஜித்தை இழந்துவாடும் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதல் கூற வார்த்தைகளே இல்லை என்றும், சுஜித்தின் மரணம் தன்னை உலுக்கிவிட்டதாகவும் கூறியுள்ளார். எப்படியாவது நலமுடன் வந்துவிடுவான் என தாம் உட்பட அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இப்படியொரு துயர நிகழ்வு நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆழ்துளைக் கிணறுகளில் நிகழும் உயிரிழப்பில் இந்த சம்பவமே கடைசியாக இருக்க வேண்டும் என்றும், இந்த உயிரிழப்பு சம்பவம் கற்றுத்தந்த பாடத்தை கடைபிடித்து பயன்பாடு அற்ற ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். சுஜித் தனது மரணத்தின் மூலம் அனைவருக்கும் பாடம் கற்றுத்தந்துவிட்டு சென்றுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், கடந்த நான்கு நாட்களாக தமக்கு நெஞ்சம் பதைபதைத்தாகவும், குழந்தை சுஜித் எப்படியாவது நலமுடன் மீட்கப்பட்டுவிடுவான் என தாம் பிரார்த்தனை செய்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் டிடிவி தினகரன்.
80 மணி நேர போராட்டம்.. கடைசி கட்டத்தில் நடந்தது என்ன?.. சுஜித் பலியானது உறுதி செய்யப்பட்டது எப்படி?