எடப்பாடி பழனிச்சாமி அண்ணனா... அப்ப டிடிவி.. தங்க தமிழ்செல்வனுக்கு புகழேந்தி சரமாரி கேள்வி
Recommended Video
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அண்ணன் என தங்க தமிழ்செல்வன் சொன்னால், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினரகன் யார் என அமமுக புகழேந்தி கேள்வி எழுப்பி உள்ளார். திடீரென எடப்பாடி பழனிச்சாமியை தங்க தமிழ்செல்வன் புகழ்வது ஏன் என புரியாத புதிராக உள்ளதாகவும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் இணையப்போவதாக செய்திகள் உலா வருகின்றன. இதனை உறுதிபடுத்தும்விதமாக அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கடம்பூர் ராஜு ஆகியோர் தங்க தமிழ்செல்வன் மீண்டும் அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம் என பேட்டி அளித்தனர்.
இதனிடையே தமிழக அரசு பிளாஸ்டிக் ஒழிப்பில் சாதனை செய்துள்ளதாகவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அண்ணன் என்றும் கூறி தங்க தமிழ்செல்வன் கடந்த 3 தினங்களுக்கு முன்பு பாராட்டினார்..
இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமமுகவின் புகழேந்தி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், எடப்பாடி பழனிச்சாமியை அண்ணன் என தங்க தமிழ்செல்வன் சொன்னால், டிடிவி தினகரன் யார்? இது போன்ற பேச்சுக்கள் சரியானதா என்பதை தங்க தமிழ்செல்வன் யோசிக்க வேண்டும். பிளாஸ்டிக் ஒழிப்பில் தமிழக அரசு சாதனை படைத்துள்ளதாக தங்க தமிழ்செல்வன் கூறுகிறார்.
அடுத்த டிஜிபி யாரு.. மாநில அரசு ஒரு சாய்ஸ்.. மத்திய அரசிடம் வேறு சாய்ஸ்.. கடும் இழுபறி!
ஆனால் அவருடைய சொந்த ஊரிலேயே பிளஸ்டிக் ஒழிப்பில் அரசு சாதனை படைத்துள்ளதாக அமைச்சர்களே சொல்லாத போது தங்கதமிழ்செல்வன் கூறி வேண்டியதன் அவசியம் என்ன? இந்த அரசு மக்களுக்காக எதையும் செய்யவில்லை. ஆனால் ஏன் அவர் புகழ்ந்தார் என்பத புரியாத புதிராக உள்ளது. சின்னம் சரியில்லை என்ற அவரது கருத்தை நானும் ஆதரிக்கிறேன்.
தங்கதமிழ்செல்வனின் அண்மைக்கால நடவடிக்கைகள் வேதனை அளிக்கிறது.அவர் கூறும் கருத்துக்களை அதிமுக அமைச்சர்களே கிண்டலாக பார்க்கிறார்கள். அதிமுகவுடன் சேருவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. அதிமுகவுடன் அமமுக எந்த சமசர திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை" இவ்வாறு கூறினார்.