சமூக நீதிக்கு பங்கம் வராத சமுதாயத்தை உருவாக்கிட பெரியார் பிறந்த நாளில் சபதம் ஏற்போம்: டிடிவி தினகரன்
சென்னை: பெண்ணுரிமைக்காக வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்த பெருந்தகையாளர், திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் அடையாளம் தந்தை பெரியாரின் பிறந்த நாளில் சமூக பங்கம் வந்துவிடாமல் சபதம் ஏற்போம் என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்காக போராடிய தந்தை பெரியாக்கு வாழ்த்து சொல்வதில் தயக்கம் இல்லை.. பாஜக தலைவர் எல். முருகன்
பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று தனது ட்விட்டர் பதிவில், ''சமுதாய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கப் பாடுபட்ட புரட்சியாளர், சமூக நீதிக்காக சளைக்காமல் உழைத்த போராளி, பெண்ணுரிமைக்காக வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்த பெருந்தகையாளர்,
திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் அடையாளம் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் இன்று தந்தை பெரியார் தந்துவிட்டுச் சென்றிருக்கும் அறிவாயுதத்தை ஏந்தி ஏற்றத்தாழ்வுகள் இல்லாத, சமூக நீதிக்கு பங்கம் வராமல் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கிட இந்நாளில் சபதம் ஏற்போம்'' என்று டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.