740 டன் அம்மோனியம் நைட்ரேட்.. சென்னையிலிருந்து நாளை அதிரடியாக இடமாற்றப்படுகிறது.. எங்கு செல்கிறது?
சென்னை: சென்னையில் கண்டெய்னர்களில் வைக்கப்பட்டு இருக்கும் அம்மோனியம் நைட்ரேட் நாளை இடமாற்றம் செய்யப்படுகிறது.
Recommended Video
கடந்த வாரம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பின் பாதிப்பு இன்னும் போகவில்லை. இதுவரை 137 பேர் இந்த பயங்கர வெடிப்பில் பலியாகி உள்ளனர். மொத்தமாக இதுவரை 3 ஆயிரம் பேர் வரை இந்த வெடிப்பில் காணாமல் போய் இருக்கிறார்கள்.
அந்த நகரமே மிக மோசமான அழிவை இதனால் சந்தித்து இருக்கிறது. இதுவரை காயம் அடைந்த 4000 பேர் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்
பெய்ரூட் சம்பவம்
பெய்ரூட்டில் அம்மோனியம் நைட்ரேட் இப்படி வெடித்தவுடன் எல்லோரின் கவனமும் சென்னை பக்கம் திரும்பியது. சென்னையில் இருக்கும் மணலியில் உள்ள கிடங்கில் அம்மோனியம் நைட்ரேட் சேமித்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2015 செப்டம்பரில் 27ம் தேதியில் இருந்து சென்னையில் இந்த அம்மோனியம் நைட்ரேட் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
சென்னை எப்படி
மொத்தம் 740 டன் அம்மோனியம் நைட்ரேட் இங்கு குவித்து வைக்கப்பட்டு இருந்தது. 5 வருடமாக இந்த அம்மோனியம் நைட்ரேட் இங்கேயே இருப்பது ஆபத்தானது என்று அறிவியலாளர்கள் கூறினார்கள். காலம் செல்ல செல்ல இந்த அம்மோனியம் நைட்ரேட் வெப்பம் அதிகரிக்கும். இதன் மூலம் அம்மோனியம் நைட்ரேட் வெடிக்கும் ஆபத்து உள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
உறுதி அளிக்கப்பட்டது
இந்த நிலையில் உடனடியாக இந்த அம்மோனியம் நைட்ரேட் இணையம் மூலம் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இந்த அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது. சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஐந்து வருடங்களாக பாதுகாப்பான இடத்தில் அம்மோனியம் நைட்ரேட் இருப்பதால் பிரச்சனை இல்லை. நீண்ட நாட்களுக்கு அம்மோனியம் நைட்ரேட் இங்கே இருக்காது. உடனே இதை விற்பனை செய்வோம் என்று தமிழக அரசு தெரிவித்தது.
உடனே விற்பனை
இந்த நிலையில் தற்போது சென்னை மணலியில் உள்ள 740 டன் அம்மோனியம் நைட்ரேட் கண்டெய்னர்களில் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. முதற்கட்டமாக 10 கண்டெய்னர்கள் நாளை ஹைதராபாத் கொண்டு செல்லப்படவுள்ளன. ஹைதராபாத் நிறுவனம் ஒன்று இந்த அம்மோனியம் நைட்ரேட்டை வாங்கிய நிலையில் தற்போது அந்த அம்மோனியம் நைட்ரேட் இடமாற்றம் செய்யப்படுகிறது.