சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Cyclone Amphan: வங்கக் கடல் இதுவரை கண்டிராத அதி தீவிர வலுவான புயலாகி வேகமெடுக்கும் "சூறாவளி" ஆம்பன்

Google Oneindia Tamil News

சென்னை: வங்கக் கடலில் இதுவரை ஏற்பட்டுள்ள புயல்களில் மிகவும் தீவிர, வலுவான புயல் என்றால் அது ஆம்பன் புயல்தான் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

Recommended Video

    Cyclone Amphan very intense | Heavy rainfall in parts of TN |

    தென் வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான ஆம்பன் புயல் கடந்த 3 தினங்களாக அதி தீவிர புயலாக உருமாறி சென்னைக்கு கிழக்கே 950 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. ஆனால் இந்த புயல் தமிழகத்திற்கு எந்த பாதிப்பையும் கொடுக்கவில்லை.

    மாறாக ஒடிஸாவின் பாரதீப் துறைமுகத்திலிருந்து 750 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த புயல் மேற்கு வங்கம்- வங்கதேசம் அருகே வரும் நாளை கரையை கடக்கும்.

    இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான்... 16 ஆண்டுகளாக நோன்பு வைக்கும் திருமாவளவன்இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான்... 16 ஆண்டுகளாக நோன்பு வைக்கும் திருமாவளவன்

    வலுகொண்ட புயல்

    வலுகொண்ட புயல்

    இந்த புயலுக்கு ஆம்பன் என பெயரிட்டது தாய்லாந்து. இந்த புயல் மிகவும் வலுகொண்டதாக இருக்கிறது. வங்கக் கடலில் உருவான புயல்களிலேயே இதுபோல் அதிதீவிர புயலை கண்டதே இல்லை என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள். கடந்த 1999ஆம் ஆண்டு ஒடிஸாவில் ஏற்பட்ட புயலுக்கு பிறகு இதுதான் தீவிர வலுகொண்ட புயலாகும்.

    மணிக்கு எத்தனை கி.மீ.

    மணிக்கு எத்தனை கி.மீ.

    இந்த புயல் மணிக்கு 260 கி.மீ வேகம் கொண்டிருந்தது. ஆனால் ஆம்பன் புயல் அதைவிட அதிகமாக மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் பயணிக்கிறது. இந்த புயல் மேற்கு வங்கம், வங்கதேசம், பர்மா ஆகிய பகுதிகளில் பேரழிவை கொடுக்கும் வல்லமை கொண்டது. இந்த புயலால் கடல் அலைகள் 20 அடி உயரத்திற்கு எழுகின்றன.

    அளவீடு

    அளவீடு

    இந்த புயல் இந்தியாவின் மேற்கு பகுதி மற்றும் வங்கதேச எல்லை அருகே நிலச்சரிவை ஏற்படுத்தும் என்கிறார்கள். 1999ஆம் ஆண்டு ஒடிஸாவையே உலுக்கிய புயலின் தீவிரம், செயற்கைகோள் மூலம் அளவிடப்பட்டது. அதுபோல் ஆம்பனின் அளவீடுகளும் அதே முறையில் அளக்கப்படுகின்றன.

    145 முடிச்சு

    145 முடிச்சு

    ஒடிஸா புயலின் காற்று வேகம் 80 முடிச்சுகளை எட்டியது. ஆனால் இந்த ஆம்பன் புயலோ 145 முடிச்சுகளுடன் தீவிரமாக உள்ளது. கோடை காலத்தில் தோன்றிய இந்த புயலால் கடல் அலைகள் மிகவும் சீற்றத்துடன் காணப்படுகிறது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. ஒடிஸாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய ஃபனி புயலும் மிகவும் வலுவடைந்த புயல்தான். ஆனால் இது இந்திய பெருங்கடலில் உருவானது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Amphan Cyclone Becomes The Strongest Cyclone Ever Recorded in Bay of Bengal, Passing 1999 Odisha Cyclone.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X