சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பல தலைமுறையை பார்த்தாச்சு.. இப்படி ஒரு பெரும் புயலை பார்த்ததே இல்லை.. மேற்கு வங்க முதியவர்கள் ஷாக்!

Google Oneindia Tamil News

சென்னை: பல தலைமுறைகளை பார்த்துவிட்டோம். ஆனால் இப்படி ஒரு பெரிய புயலை நாங்கள் சந்தித்ததே இல்லை என்கிறார்கள் மேற்கு வங்க மாநில முதியவர்கள்.

ஆம்பன் புயல் மேற்கு வங்கத்திற்கும் வங்கதேசத்திற்கும் பெருத்த சேதத்தை கொடுத்துவிட்டது. ரூ 1 லட்சம் கோடி அளவுக்கு இழப்பீட்டை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் சகஜ நிலை திரும்ப இன்னும் சில மாதங்கள் ஆகும்.

இந்த நிலையில் ஆம்பன் ஏற்படுத்திச் சென்ற பாதிப்பு குறித்த வீடியோக்களையும் ட்விட்டர் பதிவுகளையும் காண்போம்.

புதுச்சேரியில் மேலும் 4 பேருக்கு கொரோனா.. வெளிநாடுகளிலிருந்து வருவோரால் எண்ணிக்கை அதிகரிப்புபுதுச்சேரியில் மேலும் 4 பேருக்கு கொரோனா.. வெளிநாடுகளிலிருந்து வருவோரால் எண்ணிக்கை அதிகரிப்பு

பிழைத்ததே அதிசயம்

உலகமே அழிவது போன்று சுழன்று அடிக்கும் ஆம்பன். இந்த பேய் காற்றில் எப்படியோ நாங்கள் பிழைத்தோம் என்கிறார் இந்த வலைஞர்.

முதல் முறை

எனது தந்தையும் மற்ற உறவினர்களும் இது போன்ற புயலை தங்கள் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை என்கிறார்கள். ஆண்டுதோறும் ஏற்படும் புயலால் மேற்கு வங்கம் பாதிப்பது வாடிக்கைதான் என்றாலும் இதுபோன்று 4 மணிநேர சூப்பர் புயலை இதுவரை கண்டதே இல்லையாம். வங்கத்தில் வாழும் அனைத்து தலைமுறையினரும் முதல் முறையாக இந்த புயலை சந்திப்பதாக கூறுகிறார்கள்.

கொல்கத்தா

உலகில் மிகப் பெரிய நகரமான கொல்கத்தாவில் ஆம்பன் புயலின் கள நிலவரங்கள் இதோ. சுந்தரவனத்தில் என்னென்ன நடந்தது என தெரியவில்லை, எத்தனை பேர் வீட்டை இழந்தனர், எத்தனை பேர் இறந்தனர் என தெரியவில்லை என்கிறார் இந்த வலைஞர்.

புயல்

ஆம்பன் புயலால் சுந்தரவனத்தில் கடுமையாக பாதிக்கப்படட வீடுகள். 2019-இல் புல்புல் புயலாலும் இந்த பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் ஆம்பன் புயலால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

English summary
Amphan is the first super cyclone which hasseen by all the generations. It causes devastations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X