பல தலைமுறையை பார்த்தாச்சு.. இப்படி ஒரு பெரும் புயலை பார்த்ததே இல்லை.. மேற்கு வங்க முதியவர்கள் ஷாக்!
சென்னை: பல தலைமுறைகளை பார்த்துவிட்டோம். ஆனால் இப்படி ஒரு பெரிய புயலை நாங்கள் சந்தித்ததே இல்லை என்கிறார்கள் மேற்கு வங்க மாநில முதியவர்கள்.
ஆம்பன் புயல் மேற்கு வங்கத்திற்கும் வங்கதேசத்திற்கும் பெருத்த சேதத்தை கொடுத்துவிட்டது. ரூ 1 லட்சம் கோடி அளவுக்கு இழப்பீட்டை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் சகஜ நிலை திரும்ப இன்னும் சில மாதங்கள் ஆகும்.
இந்த நிலையில் ஆம்பன் ஏற்படுத்திச் சென்ற பாதிப்பு குறித்த வீடியோக்களையும் ட்விட்டர் பதிவுகளையும் காண்போம்.
புதுச்சேரியில் மேலும் 4 பேருக்கு கொரோனா.. வெளிநாடுகளிலிருந்து வருவோரால் எண்ணிக்கை அதிகரிப்பு
|
பிழைத்ததே அதிசயம்
உலகமே அழிவது போன்று சுழன்று அடிக்கும் ஆம்பன். இந்த பேய் காற்றில் எப்படியோ நாங்கள் பிழைத்தோம் என்கிறார் இந்த வலைஞர்.
|
முதல் முறை
எனது தந்தையும் மற்ற உறவினர்களும் இது போன்ற புயலை தங்கள் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை என்கிறார்கள். ஆண்டுதோறும் ஏற்படும் புயலால் மேற்கு வங்கம் பாதிப்பது வாடிக்கைதான் என்றாலும் இதுபோன்று 4 மணிநேர சூப்பர் புயலை இதுவரை கண்டதே இல்லையாம். வங்கத்தில் வாழும் அனைத்து தலைமுறையினரும் முதல் முறையாக இந்த புயலை சந்திப்பதாக கூறுகிறார்கள்.
|
கொல்கத்தா
உலகில் மிகப் பெரிய நகரமான கொல்கத்தாவில் ஆம்பன் புயலின் கள நிலவரங்கள் இதோ. சுந்தரவனத்தில் என்னென்ன நடந்தது என தெரியவில்லை, எத்தனை பேர் வீட்டை இழந்தனர், எத்தனை பேர் இறந்தனர் என தெரியவில்லை என்கிறார் இந்த வலைஞர்.
|
புயல்
ஆம்பன் புயலால் சுந்தரவனத்தில் கடுமையாக பாதிக்கப்படட வீடுகள். 2019-இல் புல்புல் புயலாலும் இந்த பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் ஆம்பன் புயலால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.