இன்றிலிருந்து அடுத்த 5 நாட்கள்.. சென்னையில் கடும் வெயில் அடிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு!
சென்னையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கடும் வெயில் அடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கடும் வெயில் அடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஆம்பன் புயல் கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து கொண்டே செல்கிறது. ஆனால் இந்த புயல் தமிழகத்தை தாக்காது. இரண்டு நாட்களுக்கு முன் வங்க கடலில் ஆம்பன் புயல் உருவானது. இந்த புயல் மே 20-ந் தேதி கரையை கடக்கும்.
வங்கத்தின் டிகா- வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளுக்கு இடையே இந்த புயல் கரையை கடக்கிறது. தெற்கு வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கே 950 கிமீ தொலைவில் ஆம்பன் புயல் மையம் கொண்டுள்ளது.
ஆம்பன் நம்மை தாக்காது.. ஆனால் இன்றும் நல்ல மழை பெய்யும்.. தமிழகத்திற்கு காத்திருக்கும் செம மழை!
தமிழ்நாடு வெதர்மேன் போஸ்ட்
இந்தநிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் போஸ்ட் செய்துள்ளார். அதில், சென்னையின் மேற்கு பகுதி மற்றும் நகரத்தில் லேசான மழை பெய்யும். அம்பத்தூர், ரெட்ஹில்ஸ், அயப்பாக்கம் , பூந்தமல்லி மற்றும் மற்ற மேற்கு பகுதிகளில் 5-10 நிமிடங்கள் மழை பெய்யலாம். நெல்லூர் மற்றும் காவலி பகுதியில் சூறை காற்று உருவாகி வருகிறது.
காற்று வீசும்
அங்கு அதிகமாக சூறை காற்று உருவாகி வருகிறது. ஆனால் இந்த காற்று சென்னைக்கு வருமா என்று இப்போதே சொல்ல முடியாது. இதனால் ஆம்பன் புயல் மூலம் நமக்கு மறைமுகமாக லக்கி மழை கிடைக்க வாய்ப்புள்ளது. ஃபனி புயல் மூலம் நமக்கு இந்த மழை கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நாளையில் இருந்து அடுத்த ஐந்து நாட்களுக்கு சென்னையில் கடும் வெயில் இருக்கும்.
கடப்பா எக்ஸ்பிரஸ் வருகிறது
இந்த கடப்பா எக்ஸ்பிரஸ் போன்ற சூறைக்காற்று நமக்கு கொஞ்சம் நல்ல காற்றை கொடுக்கும். இதனால் சென்னையில் வேகமாக காற்று வீசும். லேசான மழை பெய்யும். ஆனால் முழு சென்னையிலும் மழை பெய்யாது . மேற்கு சென்னையில் சாரல் மழை பெய்யும். காஞ்சிபுரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது, என்று தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டு இருக்கிறார்.
சென்னை நிலை
சென்னையில் கடந்த வாரம் முழுக்க கடுமையாக வெயில் அடித்தது. தினமம் 40-42 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை அடித்தது. ஆனால் அதை போக்கும் வகையில் நேற்று இரவு முழுக்க சென்னையில் மழை பெய்தது. காஞ்சிபுரத்தில் மழை பெய்தது. இன்று காலையும் சாரல் மழை பெய்தது. தற்போது 5 நாட்களுக்கு வெயில் அடிக்க வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.