இலங்கையை போல் தமிழகத்திலும் வெடிகுண்டு தாக்குதல்.. வீடியோ வெளியிட்ட மதுரை நபர்
Recommended Video
சென்னை: இலங்கையை போல் தமிழகத்திலும் 3 மாதங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடக்கும் என சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 360 பேர் பலியாகிவிட்டனர். சம்பவம் நிகழ்ந்து 9 நாட்கள் ஆன நிலையிலும் இன்னும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதனால் இலங்கையை ஒட்டியுள்ள இந்திய கடற்கரை பகுதியில் கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை தொலைபேசியில் மர்ம நபர் பேசினார்.
அவர் தான் மதுரையிலிருந்து பேசுவதாகவும் தனது பெயர் வழக்கறிஞர் சிஎம் சாமி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் அவர் கூறுகையில் தமிழகத்தில் 3 மாதங்களில் மிகப் பெரிய வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும்.
கலெக்டர் வீட்டில் அத்துமீறி நுழைந்த வழக்கு.. செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன்.. ஹைகோர்ட்
இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்துதான் தீவிரவாதிகள் சென்றனர். இதற்கு மதுரையின் தற்போதைய மாவட்ட ஆட்சியர் உடந்தையாக இருந்தார் என தெரிவித்தார். இதையடுத்து அந்த நபர் இதை வீடியோவாக சமூகவலைதளங்களிலும் பதிவிட்டார்.