திருவெறும்பூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர்.. அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொரோனா பாஸிட்டிவ்!
சென்னை: திருவெறும்பூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலையின் வீரியம் மிக அதிகமாக உள்ளது.கொரோனா தினசரி பாதிப்பு இன்று 7,000-ஐ நெருங்கி உள்ளது.
கொரோனாவை விரட்டியடிப்பதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சாதாரண மக்களுக்கு மட்டும் அல்லாது அரசியல் கட்சி தலைவர்கள் பலருக்கும் கொரோனா தொற்று எற்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போதும் பல்வேறு வேட்பாளர்களை கொரோனா தாக்கியது. தேர்தல் முடிந்த பிறகும் தி.மு.க., அ.தி.மு.க என்ற பாகுபாடின்றி வேட்பாளர்களை தொற்று பாதித்து வருகிறது.
முழு ஊரடங்குக்கு இணையாக .. மகாராஷ்டிராவில் நாளை முதல் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு!
இந்த நிலையில் திருவெறும்பூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுரைப்படி அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.