டிச.31-ல் பாமக பொதுக்குழு... செயல் தலைவர் ஆகிறாரா அன்புமணி?
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இம்மாதம் 31-ம் தேதி திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டம் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் என்றும், அது 2019-ம் ஆண்டுக்கு விடைகொடுப்போம்; 2020-ம் ஆண்டை வரவேற்போம் என்ற தலைப்பில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பொதுக்குழுவில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணிக்கு செயல் தலைவர் பதவி வழங்குவது குறித்தும் முக்கிய முடிவெடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
எச்சு ராஜா ஒரு பைத்தியக்காரார்.. அறிவுடையவர்கள் அப்படி பேசமாட்டார்கள்.. கடுமையாக விளாசிய குஷ்பு!
சிறப்பு பொதுக்குழு
பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் 31-ம் தேதி நடைபெறவுள்ளதால் இப்போதே அது தொடர்பான பரபரப்பு அக்கட்சி நிர்வாகிகளிடையே பற்றிக்கொண்டது. வழக்கமாக தைலாபுரத்தில் நடக்கும் கூட்டம் இந்த முறை திண்டிவனம் -புதுச்சேரியில் சாலையில் உள்ள ஓமந்தூரில் நடைபெறுகிறது.
கட்சிப்பணிகள்
நிர்வாகிகள் சார்பில் 2019-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கட்சி வளர்ச்சிப்பணிகள், 2020-ம் ஆண்டும் மேற்கொள்ளவேண்டிய கட்சிவளர்ச்சிப்பணிகள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என பாமக தலைவர் கோ.க.மணி தெரிவித்துள்ளார். மேலும், இந்தக் கூட்டத்திற்கு அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் தவறாது வர வேண்டும் என அழைப்பும் விடுத்துள்ளார்.
புரோமோஷன்
பல வருடங்களாக பாமக இளைஞரணித் தலைவராக உள்ள அன்புமணிக்கு, இந்த பொதுக்குழுவில் செயல்தலைவர் பதவி வழங்குவது பற்றி முக்கிய முடிவெடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாம். அன்புமணிக்கு புரோமோஷன் வழங்க பொதுக்குழு உறுப்பினர்கள் ஆவலுடனும், ஆர்வமுடனும் உள்ளார்களாம்.
சட்டமன்றத் தேர்தல்
மேலும், கூட்டணி விவகாரத்தில் இதே நிலைப்பாட்டை தொடர்வதா அல்லது புதிய முடிவெடுப்பதா என்பது பற்றியும் பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்தை அறிந்து கொள்ள அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் விரும்புகிறாராம். இதனால் இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்கள் பற்றிய எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது.