குழந்தைகள், பெண்களை சீரழிக்கும் கொடியவர்களை தப்பவிடக்கூடாது -அன்புமணி
சென்னை: பெண்களையும் குழந்தைகளையும் சீரழிக்கும் கொடியவர்களை தப்பவிடக்கூடாது என பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அண்மைக்காலமாக அரங்கேறி வரும் கொடூர நிகழ்வுகளை மையமாக வைத்து அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
''திருச்சி அருகே 14 வயது சிறுமி கொடியவர்களால் சீரழிக்கப்பட்டு, உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு காரணமானவர்களை தப்ப விடக்கூடாது. குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும்!
பாலியல் மிரட்டலால் வேலூர் பாகாயத்தில் 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை, செய்யூரில் இளம்பெண் மர்ம மரணம், அறந்தாங்கி அருகே 7 வயது குழந்தை சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகள் வேதனை அளிக்கின்றன. நாம் எத்தகைய சமுதாயத்தில் வாழ்கிறோம் என்ற சலிப்பை ஏற்படுத்துகின்றன.
அதிமுகவில் 3 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர்...? 4 மணி நேரமாக விவாதித்த ஐவர் குழு
தமிழகத்தில் இத்தகைய வன்கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக வாழும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக பெற்றோர்கள் குழந்தைகளை கண்ணின் இமைகளை காப்பது போல பாதுகாக்க வேண்டும்''!