அறிவாலயம் வருகிறார்.. சந்திரபாபு நாயுடு ஏன் இப்போ.. இங்கே வரணும்.. என்னாவா இருக்கும்!
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை அறிவாலயம் வர உள்ளார்.
சென்னை: ஆந்திராவில் தேர்தலை முடித்துவிட்டு, அடுத்தக்கட்ட வேலையில் ஜரூராக இறங்கி உள்ளார் சந்திரபாபு நாயுடு!
இந்த தேர்தலில் அகில இந்திய அளவில் சந்திரபாபு நாயுடுவின் அரசியல் செயல்பாடு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து வருகிறது.
ஆந்திர மாநில தேர்தலுக்கு முன்னமேயே மம்தா பானர்ஜி பொதுக்கூட்டம் முதல் அனைத்துக்கும் ஆதரவு கரம் நீட்டினார். இதேபோல திமுக தலைவர் ஸ்டாலினையும் அவரது வீட்டிலும், டெல்லியிலும் அடிக்கடி சந்தித்து பேசினார். குறிப்பாக கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைக்கக்கூடிய மிக முக்கிய பணியைதான் நாயுடு பலமுறை மேற்கொண்டார்.
தேர்தல் செலவுக்கு என் கிட்னியை விற்க அனுமதியுங்க... எலெக்சன் கமிஷனை அதிரவைத்த வேட்பாளர்
கூடுதல் பலம்
இப்போது நிலைமை, மத்தியில் பொறுத்தவரை காங்கிரஸை விட பாஜகவின் பலம் கூடி உள்ளதாகவும், மோடி-அமித்ஷா என்ற இரட்டையர்கள் இன்னும் 20 ஆண்டு காலம் ஆட்சி செலுத்துவார்கள் என்று ஒரு தகவல் வந்தவண்ணம் உள்ளது. அதேபோல, தமிழகத்தை பொறுத்தவரை அதிமுகவுக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளதாகவும் உளவுத்துறை தகவல்கள் வருகின்றன.
வாக்குப் பதிவு இயந்திரம்
சில தினங்களுக்கு முன்பு ஆந்திராவில் நடந்து முடிந்த எம்பி, எம்எல்ஏ தேர்தலின்போது, பெரும்பாலான வாக்குச் சாவடிகளில்வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் சென்று புகார் அளித்தார் நாயுடு. இந்த நிலையில்தான் சந்திரபாபு நாயுடு ஸ்டாலினை இன்று சந்திக்க உள்ளதாக தெரிகிறது.
திருவாரூர் பிரச்சாரம்
இந்த விவகாரம் தொடர்பாகவோ அல்லது தேர்தலுக்கு பின் கூட்டணி குறித்தோ ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் ஸ்டாலினோ திருவாரூரில் இன்று பிரச்சாரம் செய்கிறார். அதனால் நாயுடுவை நேரில் சந்தித்து பேச முடியாது என்பதால், அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார் சந்திர பாபு நாயுடு.
முக்கிய சந்திப்பு
தன்னுடைய சொந்தக்காரர் வீட்டு கல்யாணத்துக்கு நாயுடு வருவதாக சொல்லப்பட்டாலும், இது தேர்தல் சமயம் என்பதால் திமுக நிர்வாகிகளுடன் நடக்க போகும் இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.