அத்தை மகளுடன் வீடியோ காலில் பேச தடை... ஆத்திரத்தில் பெண் காவலரின் மண்டையை பிளந்த போலீஸ் கணவர்!
சென்னை: சென்னையில் அத்தை மகளுடன் வீடியோ காலில் பேச தடை விதித்ததால் ஆத்திரம் அடைந்த கணவர் தனது மனைவியை(பெண் காவலர்) மண்டையை உடைத்தார். இதையடுத்து போலீசார் பெண் காவலரின் கணவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் வசிப்பவர் ராஜூ (42). இவர் சென்னை மாநகர காவல் துறையில் நுண்ணறிவு பிரிவில் காவலாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கனிமொழி (40), தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வருகிறார்.
ராஜபாளையத்தில் உள்ள தனது அத்தை மகளுடன் ராஜூ, அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்துள்ளார். இதுபற்றி அறிந்த கனிமொழி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கணவனை கண்டித்துள்ளார். ஆனால், இதை கேட்காமல் ராஜி தொடர்ந்து தனது அத்தை மகளுடன் பேசி வந்துள்ளார்.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு ராஜூ, அத்தை மகளுடன் வீடியோ காலில் பேசியிருக்கிறார். இதனால் கோபமடைந்த கனிமொழி, கணவனை கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இதனால், அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜூ, உருட்டுக்கட்டையை எடுத்து வந்து, கனிமொழியின் தலையில் ஓங்கி அடித்தாராம்.
ஓசூர் அருகே கிராமத்தினருடன் மோதல்.. வடமாநிலத் தொழிலாளர்கள் படுகொலை.. 3 பேர் படுகாயம்
இதில், மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கனிமொழி கொடுத்த புகாரின்படி, எழும்பூர் போலீசார் நுண்ணறிவு காவலர் ராஜூவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்,