ஹனிமூன் சென்ற போது கோத்தகிரியில் வைத்து போட்டு தள்ள பிளான் செய்த அனிதா... 2 முறை எஸ்கேப் ஆன கதிரவன்
Recommended Video
சென்னை: திருவான்மியூர் கடற்கரையில் கணவனை கள்ளக்காதலன் வைத்து மனைவியே தாக்குதல் நடத்திய விவகாரத்தில் இது இரண்டாவது கொலை முயற்சி என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கதிரவனுக்கும் (30) தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த அனிதாவுக்கும் (25) கடந்த 13 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் சென்னையை அடுத்த பல்லாவரம் தர்கா சாலையில் ஒரு வீட்டில் இருவரும் குடிவந்தனர்.
[ "கண்ணாமூச்சி லே லே".. கள்ளக்காதலனுக்காக கணவனை கொல்ல பலே பிளான் போட்ட அனிதா.. பரபர தகவல்கள் ]
கொலை முயற்சி
இருவரும் நேற்று காலை திருவான்மியூர் கடற்கரைக்கு சென்றனர். அப்போது மர்மநபர்கள் இருவர் கதிரவனை தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றனர். விசாரணையில் மனைவி அனிதாவே அவரது கள்ளக்காதலன் மூலம் இந்த தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றியதும் அது வெறும் தாக்குதல் அல்ல கொலை முயற்சி என்பது தெரியவந்தது.
திருமணம்
இதையடுத்து அனிதாவிடம் விசாரணை நடத்தியதில் அவர் பல திடுக் தகவல்களை அளித்தார். தூத்துக்குடியை சேர்ந்தவர் ஜெகன். இவர் அனிதாவுடன் படித்தவர். இருவரும் படிக்கும் போதே காதலித்துள்ளனர். ஆனால் அனிதாவை அவரது பெற்றோர் கதிரவனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
கோத்தகிரிக்கு தேனிலவு
இந்நிலையில் ஜெகனை மறக்க முடியாததால் கோத்தரிக்கு தேனிலவு சென்ற போது ஜெகனை போட்டு தள்ள அனிதா திட்டமிட்டார். ஆனால் அது நிறைவேறவில்லை. இதனால் நல்ல சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த போதுதான் திருவான்மியூர் கடற்கரைக்கு செல்லலாம் என கதிரவன், அனிதாவிடம் கூறியுள்ளார்.
கொள்ளை நாடகம்
இதை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்த முயற்சித்த அனிதா இந்த தகவலை ஜெகனிடம் தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி கதிரவனின் கண்களை கட்டி கொண்டு கண்ணாமூச்சி விளையாடிய போது மறைந்திருந்த ஜெகன் மற்றும் அவரது நண்பர் இருவரும் கதிரவனை இரும்பு கம்பியால் தாக்கி நகைகளை கொள்ளையடித்துவிட்டு யாருக்கும் சந்தேகம் இல்லாத வகையில் கொள்ளை நாடகம் நடத்தியது தெரியவந்தது.