இரவில் பீச்சில் பெண்ணுடன் உல்லாசம்.. காலையில் கொலை.. உடல் மீது மண் போட்டு மூடி சென்ற கொடுமை
மெரினா பீச்சில் பெண் அடித்து கொலை செய்தது தொடர்பாக விசாரணை நடக்கிறது.
சென்னை: மெரினா பீச்சில் பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இப்படி கொடூரமாக அடித்ததும் இல்லாமல் அந்த பெண்ணின் உடல் மீது மணல் போட்டு மூடிச்சென்ற கொலையாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.
மூக்கில் ரத்தம்
மெரினா பீச் நீச்சல் குளம் அருகே இன்று காலை வாக்கிங் சென்ற நபர்கள் மணலில் பெண்ணின் உடல் இருப்பதையும், அந்த சடலம் மீது மணல் கொட்டப்பட்டு அரைகுரையாக மூடப்பட்டு இருந்ததையும் பார்த்தார்கள். எனினும் அருகில் சென்று பார்த்தபோது அந்த பெண்ணின் மூக்கில் ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. உடலெங்கும் காயங்கள்... குறிப்பாக முகம்தான் அதிகமாக தாக்கப்பட்டு இருக்கிறது. காயங்களிலிருந்து ரத்தம் வந்து கொண்டே இருந்தது.
யார் என தெரியவில்லை
அதிர்ச்சி அடைந்து பொதுமக்கள் உடனடியாக அண்ணாசதுக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் சடலத்தை உடலை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனர். உயிரிழந்ததாக கூறப்படும் பெண்ணுக்கு 35 வயது இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் அவர் யார்? என்ன? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
விட்டு சென்ற செருப்புகள்
அந்த பெண்ணின் அருகில் பெண்ணின் செருப்பும், ஒரு ஆணின் செருப்பும் ஜோடியாக கிடந்தன. கூடவே மதுபாட்டில்களும் அந்த பெண்ணின் செல்போனும் இருந்தது. அந்த செல்போனில் பதிவாகி இருந்த நம்பர்களை கொண்டு விசாரணை நடைபெறுகிறது.
மண் போட்டு மூட முயற்சி
உல்லாசமாக இருக்க பீச்சுக்கு அந்த பெண்ணை யாரேனும் தனியாக அழைத்து வந்திருக்கலாம் என்றும் ஒன்றாக மது அருந்திய இருவருக்குள் தகராறு ஏற்பட்டு அதனால் அந்த பெண்ணை நபர் கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். தாக்கப்பட்ட பெண் இறந்துவிடவும் பதட்டத்தில் அரைகுறை மண்ணை போட்டு மூடியதுடன், தனது செருப்பையும் அங்கேயே விட்டு கொலையாளி தப்பி சென்றிருக்கலாம் என்றும் போலீசார் யூகிக்கின்றனர்.
தனிப்படை அமைப்பு
பெண்ணை அடித்து கொலை செய்தவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மெரினா பீச்சில் பெண்ணை அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.