சென்னை ஐஐடியை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்திலும் பரவியதா கொரோனா?
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதை அடுத்து சென்னை ஐஐடியை போல் இங்கும் கொரோனா பரவுகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பரிசோதனை கூடங்கள், நூலகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. நேற்று முன் தினம் வரை 71 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது.
ஆனால் நேற்று ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா பாதிபபு ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் மேலும் 79 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஐஐடியில் கொரோனா பாதிப்பு 183 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களில் இருவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.
மும்பை தாராவியாக மாறிய சென்னை ஐஐடி.. திடீரென ஹாட்ஸ்பாட்டான சம்பவம்.. காரணம் இதுதான்.. நெட்டிசன்கள்
இதன் முடிவுகள் வெளியானால்தான் அந்த பல்கலைக்கழகத்தில் எத்தனை மாணவர்களுக்கு கொரோனா பரவல் என்பது தெரியவரும்.