தேச விரோத சக்திகளின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது.. தலை முழுகுவோம்.. கமல்ஹாசன் ஆவேசம்
சென்னை: தேச விரோத சக்திகளின் வீழ்ச்சியின் தொடக்கம் இது என்று, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டம் மற்றும், அதை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீதான தடியடி ஆகியவற்றை கண்டித்து அறிக்கையொன்றை, தனது ட்வீட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
மேலும், தனது ட்வீட்டுகளில் அவர் கூறியிருப்பதை பாருங்கள்:
தேச விரோத சக்திகளின் வீழ்ச்சியின் தொடக்கம் இது, சாதிப்பிரிவுகள் சொல்லி அதில் தாழ்வென்றும் மேலன்றும் சொல்வார்
நீதிப்பிரிவுகள் செய்வார் - அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்
சாதிக்கொடுமைகள் வேண்டா அன்பு
தன்னில் செழித்திடும் வையம். 102 ஆண்டுகளுக்கு முன் பாரதி சொன்னது இது.
கரம் கோர்த்து தலை முழுகுவோம் இவர்களை. தாய் திருநாட்டின் இப்பிணிகளை.
— Kamal Haasan (@ikamalhaasan) December 17, 2019
தேச விரோத சக்திகளின் வீழ்ச்சியின் தொடக்கம் இது. (15/15)
- உங்கள் நான் pic.twitter.com/ff7X3SXTN2
நம் படையோடு மோத வழியில்லை என்று தெரிந்து கொண்டு,நம் கால்களுக்கிடையில் பாம்புகளை விடுகிறார்கள். பாம்பைக் கண்டு பயப்படும் படையல்ல எங்கள் இளைஞர் கூட்டம் என்பதை உரக்க சொல்ல வேண்டிய நேரமிது. சர்வாதிகாரத்துக்கு எதிராக சுதந்திர காற்றை சுவாசிக்க ஜனநாயக ஆற்றில் மூழ்கி தான் எழ வேண்டும். கரம் கோர்த்து தலை முழுகுவோம் இவர்களை. தாய் திருநாட்டின் இப்பிணிகளை.
தேச விரோத சக்திகளின் வீழ்ச்சியின் தொடக்கம் இது. இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.