சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

Google Oneindia Tamil News

சென்னை: "இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம். ஆனால், நேரத்தை மட்டும் மீட்க முடியாது" என பாலிவுட் நட்சத்திரம் சேகர் கபூருக்கு இசையப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்

பாலிவுட் திரையுலகில் நிறைய பேருக்கு வாய்ப்புகள் திட்டமிட்டு மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அண்மையில் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பின் வரிசையாக பலரும் தங்களுக்கு ஏற்பட்ட அனுவங்களை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழகத்தைச் சேர்ந்த இசை அமைப்பாளர் ரகுமான் அதேபோல் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை குறித்து அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களை நேரடியாகவே தெரிவித்து உள்ளார்.

இந்தி பட உலகில்.. எனக்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுகிறது.. ஏ. ஆர் ரகுமான் பரபரப்பு தகவல்!இந்தி பட உலகில்.. எனக்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுகிறது.. ஏ. ஆர் ரகுமான் பரபரப்பு தகவல்!

பாலிவுட்டில் எதிர்ப்பு

பாலிவுட்டில் எதிர்ப்பு

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படமான தில் பெச்சாராவுக்கு இசையமைத்து இருந்தார். இந்நிலையில் ரேடியோ மிர்ச்சிக்கு இப்படம் தொடர்பாக பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், "பாலிவுட் திரைப்படங்களுக்கு ஏன் அதிக இசையமைக்கவில்லை?" என்று கேட்கப்பட்டது. அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான், "நான் நல்ல திரைப்படங்களை வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் ஒரு கும்பல் எனக்கு எதிராக பாலிவுட்டில் இயங்குகிறது." என வெளிப்படையாக கூறி அதிர வைத்தார்.

உங்கள் திறமை அதிகம்

உங்கள் திறமை அதிகம்

இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாலிவுட் கலைஞர் சேகர் கபூர் டிவிட் போட்டிருந்தார். அவர் தனது ட்விட் பதிவில், "பாலிவுட்டை கையாளக்கூடியதை விட உங்களிடம் அதிக திறமை இருக்கிறது என்பதை இந்த விவகாரம் நிரூபிக்கிறது." என கூறியிருந்தார்.

நேரத்தை மீட்க முடியாது.

நேரத்தை மீட்க முடியாது.

இந்நிலையில் , "இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம். ஆனால், நேரத்தை மட்டும் மீட்க முடியாது. செய்வதற்கு நிறைய வேலைகள் உள்ளன. அமைதியாக கடந்து செல்வோம்." என சேகர் கபூரின் டிவிட்டிற்கு ரஹ்மான் பதில் அளித்துள்ளார். பாலிவுட் திரையுலகில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ள பிரபல இசையமைப்ளர் ஏ.ஆர் ரஹ்மானின் கருத்து இந்திய சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீங்கள் ஆண்மான்

நீங்கள் ஆண்மான்

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, ஏ.ஆர் ரஹ்மானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். "வட இந்தியக் கலையுலகம் தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை. இரண்டுக்கும் உயிர்வாழும் எடுத்துக்காட்டுகள் உண்டு. ரகுமான்! நீங்கள் ஆண்மான்; அரிய வகை மான். உங்கள் எல்லை வடக்கில் மட்டும் இல்லை." என டிவிட்டரில் வைரமுத்து கூறியுள்ளார்.

English summary
ar rahuman tweet about bollywood, he said that Lost Money comes back, fame comes back, but the wasted prime time of our lives will never come back. Peace! Lets move on. We have greater things to do
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X