அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்? தலைமை அறிவிக்கும் முன்பே சுவர் விளம்பரம்.. இப்படி பண்றீங்களே
சென்னை: அரக்கோணம் லோக்சபா தொகுதிக்கான, திமுக வேட்பாளராக ஜெகத்ரட்சகனை முன்னிறுத்தி இப்போதே சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டு வருகின்றன.
வேலூர் மாவட்டம், அரக்கோணம் லோக்சபா தொகுதிக்கான வேட்பாளர் நேர்காணல் திமுகவில் மார்ச் 10ம் தேதிதான் நடந்து முடிந்தது. அதிமுகவில் மார்ச் 11ம் தேதி நடைபெற்று முடிந்தது.
அதிமுகவில் வேட்பாளர் நேர்காணல் நடைபெறுவதற்கு முன்பாகவே வேலூர் தொகுதிக்கு ஏ.சி.சண்முகம் தான் வேட்பாளர் என பிரச்சார நோட்டீஸ் ரெடி செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர் அவரது ஆதரவாளர்கள்.
மக்களே உங்களுக்கு காந்தியின் இந்தியா வேண்டுமா.. கோட்சே இந்தியா வேண்டுமா.. ராகுல் கேள்வி
இதேபோல வேலூர் லோக்சபா தொகுதி வேட்பாளர் திமுகவின் கதிர் ஆனந்த் என நோட்டீஸ் வெளியிடப்பட்டது அவரது ஆதரவாளர்களால்.
இதையெல்லாம் மிஞ்சும் வகையில், ''அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகன்'' என நெமிலி ஒன்றியத்தின் பலயிடங்களில் சுவர் விளம்பரம் செய்துள்ளனர் அப்பகுதி திமுக நிர்வாகிகள்.
''தலைமை அறிவிக்கும் முன்பாகவே விருப்பமனு அளித்தவர்களின் ஆதரவாளர்களே இன்னார் தான் வேட்பாளர்ன்னு பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். விளம்பரம் செய்கிறார்கள். இதுதான் கட்சி தலைவருக்கும், கட்சி தலைமைக்கும் இவர்கள் தரும் மரியாதையா?'' என கேள்வி எழுப்புகின்றனர் திமுக, அதிமுக தொண்டர்கள்.